இந்தியா

மேகாலயா, பாட்னா உயர் நீதிமன்றங்களுக்கு புதிய நீதிபதிகள்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மே​கால​யா, பாட்னா உயர்​ நீ​தி​மன்​றங்​களுக்கு புதிய நீதிப​தி​களை நியமித்து குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு உத்​தர​விட்​டுள்​ளார்.

மும்பை உயர் நீதி​மன்ற நீதிபதி ரேவதி பிர​சாந்த் மொஹிதே தேரவை மேகாலயா உயர் நீதி​மன்ற தலைமை நீதிப​தி​யாக​வும், ஒடிசா உயர் நீதி​மன்ற நீதிபதி சங்​கம் குமார் சாகுவை பாட்னா உயர் நீதி​மன்ற தலைமை நீதிப​தி​யாக​வும் நியமிக்க மத்​திய அரசுக்கு உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூரிய​காந்த் தலை​மையி​லான கொலீஜி​யம் பரிந்​துரைத்​திருந்​தது.

மத்​திய அரசு ஒப்​புதல் அளித்​ததை தொடர்ந்​து, இரு​வரை​யும் தலைமை நீதிப​தி​களாக நியமித்து குடியரசுத் தலை​வர் உத்​தர​விட்​டுள்​ளார்​.

SCROLL FOR NEXT