இந்தியா

ஜூன் 22 வரை டெலிகிராம் செயலிக்கு தடை - நீட் மறுதேர்வை முன்னிட்டு அதிரடியும் பின்னணியும்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நீட் மறு​தேர்வை முன்​னிட்டு ஜூன் 22-ம் தேதி வரை இந்​தி​யா​வில் டெலிகி​ராம் செயலிக்கு தடை விதிக்​கப்​பட்டு உள்ளது.

மருத்​துவ இளநிலை படிப்​பு​களுக்​கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 3ம் தேதி நடை​பெற்​றது. வினாத்​தாள் கசிவு காரண​மாக இந்த தேர்வு ரத்து செய்​யப்​பட்​டது. வரும் 21-ம் தேதி நீட் மறு​தேர்வு நடைபெற உள்​ளது. இதில் வினாத்​தாள் கசிவை தடுக்க பல்​வேறு முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்டு உள்​ளன. நீட் மறு​தேர்வு வினாத் ​தாளை தயாரித்த பேராசிரியர்​கள் ரகசிய இடத்​தில் தங்க வைக்​கப்​பட்டு உள்​ளனர்.

அவர்​கள் மொபைல்​போன் பயன்​படுத்த தடை விதிக்​கப்​பட்டு உள்ளது. கடந்த மே 3-ம் தேதி தேர்​வின்​ போது அஞ்​சல் துறை வாகனங்​கள் மூலம் பல்​வேறு நகரங்​களுக்கு வினாத் ​தாள்​கள் கொண்டு செல்​லப்​பட்​டன. இந்த முறை விமானப் படை ஹெலிகாப்​டர்​கள் மூலம் நீட் மறு​தேர்வு வினாத்​ தாள்​களை கொண்டு செல்ல ஏற்​பாடு செய்​யப்​பட்டு இருக்​கிறது.

கடந்த மாத நீட் தேர்​வின்​போது டெலிகி​ராம் செயலி மூலம் வினாத் ​தாள் விற்​பனை செய்​யப்​பட்​டது சிபிஐ விசா​ரணை​யில் உறுதி செய்​யப்​பட்டு உள்​ளது. இதை கருத்​தில் கொண்டு ஜூன் 22ம் தேதி வரை இந்​தி​யா​வில் டெலிகி​ராம் செயலிக்கு தடை விதிக்கப்​பட்டு உள்​ளது. மேலும் நீட் மறு​தேர்​வுக்​குப் பிறகு வதந்திகள் பரவுவதைத் தடுக்க ஜூன் 30-ம் தேதி வரை டெலி கிராம் செயலி​யில் எடிட்​டிங் வசதி முடக்​கப்​பட்டு உள்​ளது. இதற்கான உத்​தரவை மத்​திய மின்​னணு, தகவல் தொழில்​நுட்பதுறை பிறப்​பித்​திருக்​கிறது.

இதுகுறித்து நீட் தேர்வை நடத்​தும் தேசிய தேர்வு முகமை (என்​டிஏ) சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறியிருப்பதாவது: நீட் தேர்வு எழுதும் மாணவ, மாண​வியரின் நலனை கருத்​தில் கொண்டு டெலிகி​ராம் செயலிக்கு தற்​காலிக தடை விதித்த மத்​திய மின்​னணு, தகவல் தொழில்​நுட்ப அமைச்சகத்​துக்கு என்​டிஏ நன்றி தெரிவிக்​கிறது.

கடந்த சில வாரங்​களாக பேப்​பர் லீக்டு நீட், ரீ- நீட் 2026, பிரைவேட் மாஃபி​யா, ரீ- நீட் மாபியா மற்​றும் அது​போன்ற பெயர்​களில் டெலி கி​ராம் செயலி​யில் பல்​வேறு மோசடி கும்​பல்​கள் செயல்​பட்​டன. இந்த கும்​பல்​கள் நீட் மறு​தேர்வு எழுதும் மாணவர்​கள், குடும்பத்தினரை டெலிகி​ராம் வாயி​லாக அணுகி சில ஆயிரம் முதல் பல லட்​சம் வரை கோரின.

இது தொடர்​பாக அகம​தா​பாத் சைபர் குற்​றப்​பிரிவு போலீ​ஸார் 8 டெலி கி​ராம் சேனல்​களை முடக்​கினர். இந்த சேனல்​களை இயக்கிய மோசடிக் கும்​பலின் உறுப்​பினர்​கள் கைது செய்யப்பட்டு உள்​ளனர். ஒரு மாதத்​தில் சுமார் ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோரை தொடர்பு கொண்ட மோசடி கும்​பல் சுமார் ரூ.1.5 கோடி வரை பணம் பறித்​திருக்​கிறது. இவற்றை கருத்​தில் கொண்டு ஜூன் 22ம் தேதி வரை டெலி கி​ராம் செயலிக்கு தற்​காலிக​மாக தடை விதிக்​கப்​பட்டு உள்​ளது.

நேர்​மை​யாக, நம்​பக​மான முறை​யில் நீட் மறு ​தேர்வு நடத்​தப்​படும் என்று என்​டிஏ உறுதி அளிக்​கிறது. மாணவர்​கள் சமூக வலை​ தளங்​களில் வெளி​யாகும் வதந்​தி​கள், தவறான தகவல்​களை நம்​பக்​கூ​டாது. மொபைல்​போன், சமூக வலை ​தளம் வாயி​லாக மோசடி கும்​பல்​கள் தொடர்பு கொண்​டால் 1930 எண், http://cybercrime.gov.in இணை​யத்​தில் புகார் செய்​ய​லாம். மேலும் என்​டிஏ​வின் உதவி எண்​கள் 011- 4075 9000 / 011- 6922 7700 மற்​றும் neetug@nta.ac.in மின்​னஞ்​சலிலும் புகார்​களை பதிவு செய்​ய​லாம். இவ்​வாறு என்​டிஏ தெரி​வித்​துள்​ளது.

கைதானவர் தேர்வு எழுத அனு​மதி: நீட் வினாத் ​தாளை ரூ.10 கோடிக்கு விற்ற குற்​றச்​சாட்​டின் பேரில் ஹரி​யா​னா​வின் குர்கானை சேர்ந்த மாணவர் யஷ் யாதவ் கைது செய்​யப்​பட்​டு, திகார் சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார். இதனிடையே அவருடைய மனுவை வி​சா​ரித்த டெல்லி நீதி​மன்​றம், நீட் மறுதேர்வு எழுத அனு​மதி வழங்​கியது. சிறை அதி​காரி​கள்​ அவரை அழைத்​துச்​ செல்​ல​வும்​ உத்​தரவிட்​டது.

SCROLL FOR NEXT