புதுடெல்லி: இளநிலை மருத்துவப் படிப்புக்கான ‘நீட்' நுழைவுத் தேர்வு கடந்த மே 3ம் தேதி நடந்தது.
வினாத்தாள் முன் கூட்டியே கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால் இத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மறு தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில் வினாத்தாள் கசிவு வழக்கில் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா, பிஹார் ஆகிய மாநிலங்களில் அடுத்தடுத்து 13 பேரை சிபிஐ கைது செய்தது.
இவர்களில் 10 பேரின் நீதிமன்ற காவல் நிறைவடைந்தது. இதையடுத்து, 10 பேரும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 10 பேரின் நீதிமன்ற காவலை ஜூலை 11 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.