இந்தியா

‘நீட்' வழக்கில் கைதானவருக்கு ரூ.1,500 கோடி சொத்து: 8 ஏக்கரில் பள்ளி, கல்லூரி கட்டி வருவதும் அம்பலம்

செய்திப்பிரிவு

லத்தூர்: நீட் வினாத்​தாள் கசிவு வழக்​கில் கைதான லத்​தூர் வேதியியல் பயிற்சி மைய நிறு​வனருக்கு ரூ.1,500 கோடி சொத்துகள் இருப்​பதும் 8 ஏக்​கர் நிலத்​தில் அவர் பள்​ளி, கல்​லூரி கட்டி வரு​வதும் அம்​பல​மாகி​யுள்​ளது.

வினாத்​தாள் கசிவு காரண​மாக, கடந்த மே 3-ம் தேதி நடை​பெற்ற நீட் தேர்வு ரத்து செய்​யப்​பட்​டுள்​ளது. மறுதேர்வு ஜூன் 21-ம் தேதி நடை​பெறும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. நீட் வினாத்​தாள் கசிவு தொடர்​பாக மகா​ராஷ்டிர மாநிலம் லத்​தூரை சேர்ந்த ரேணு​காய் வேதி​யியல் பயிற்சி மைய நிறு​வனர் சிவ​ராஜ் ரகு​நாத் மோட்​டே​கான்​கர் என்​பவரை சிபிஐ கடந்த ஞாயிற்​றுக்​கிழமை கைது செய்தது.

இது தொடர்​பாக சிபிஐ அதி​காரி​கள் கூறுகை​யில், “தேசிய தேர்வு முகமை​யுடன் தொடர்​புடைய வேதி​யியல் விரிவுரை​யாளர் பி.​வி. குல்​கர்​னி​யுடன் மோட்​டே​கான்​கர் நெருங்​கிய தொடர்​பில் இருந்துள்​ளார். கசிந்த நீட் வினாத்​தாள் மோட்​டே​கான்​கரின் செல்போனில் இருந்​தது. தேர்​வுக்கு 10 நாட்​களுக்கு முன்பே இவர் வினாத் தாளை பெற்​றுள்​ளார். வினாத்​தாளை கசி​ய​விட்ட கும்பலின் தீவிர உறுப்​பின​ராக இவர் செயல்​பட்​டுள்​ளார்” என்றனர்.

மோட்​டே​கான்​கர் சுமார் 25 ஆண்​டு​களுக்கு முன், ஒரு பகு​திநேர ஆசிரிய​ராக வாழ்க்​கையை தொடங்​கி​யுள்​ளார். 1999- 2000 கால​கட்​டத்​தில், லத்​தூரில் ஒரு சிறிய கடை​யில் வெறும் 10 மாணவர்களை கொண்டு அவர் ‘ரேணு​காய் வேதி​யியல் வகுப்புகள்' (ஆர்​சிசி) என்ற பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளார். காலப் ​போக்​கில், இந்த நிறு​வனம் மிக வேக​மாக விரிவடைந்​தது. தற்​போது லத்​தூர், நாந்​தேட், சத்​ரபதி சம்​பாஜிநகர், புனே, அகோலா, நாசிக், சோலாப்​பூர் உள்​ளிட்ட 8 மாவட்​டங்​களில் இது செயல்​பட்டு வரு​கிறது.

இந்​த நிறு​வனத்​தின் மொத்த சொத்து மதிப்பு தற்​போது சுமார் ரூ.1,500 கோடி​யாக இருக்​கும் என கருதப்​படு​கிறது. 40,000-க்​கும் மேற்​பட்ட மாணவர்​கள் இந்த நிறு​வனத்​தில் பயின்று வரு​வ​தாக கூறப்படுகிறது. இந்​நிலை​யில் லத்​தூர் அருகே கோபே​கான் ஷிவார் பகு​தி​யில் 8 ஏக்​கர் நிலத்​தில் இவர் பள்​ளி, கல்​லூரி கட்டி வரு​வது தேசிய அளவில் கவனத்தை ஈர்த்​துள்​ளது.

அந்த நிலத்​தில் இரண்​டரை ஏக்​கர் பரப்​பள​வில் பிரம்​மாண்ட பல அடுக்​குக் கட்​டிடம் உரு​வாகி வரு​வதும் அதன் கட்​டு​மானப் பணிகள் ஏறக்​குறைய நிறைவடை​யும் நிலை​யில் இருப்​பதும் வெளிச்​சத்​துக்கு வந்​துள்​ளது. இது மோட்​டே​கான்​கரின் வரு​மான ஆதா​ரம் மற்​றும் நிதி ஆதா​ரங்​கள் குறித்த கேள்வி​களை எழுப்பியுள்​ளது.

கடந்த 2025-ல் இவரது பயிற்சி மையங்​களில் படித்த 19 மாணவர்கள் நாடு முழு​வதும் எய்ம்ஸ் மருத்​து​வ​மனை​களில் அட்மிஷன் பெற்​றுள்ள நிலை​யில் இது தொடர்​பாக​வும் சிபிஐ விசா​ரித்து வரு​கிறது. நீட் வினாத்​தாள் கசிவு வழக்​கில் வேதி​யியல் விரிவுரை​யாளர் பி.​வி.குல்​கர்​னி, உயி​ரியல் விரிவுரை​யாளர் மனிஷா மந்​தாரே உள்​ளிட்ட 10 பேரை சிபிஐ இது​வரை கைது செய்​துள்​ளது.

SCROLL FOR NEXT