இந்தியா

ஆந்திராவில் 4 அமைச்சர்களுக்கு நக்சலைட்டுகள் மிரட்டல்

என்.மகேஷ்குமார்

அமராவதி: ஆந்​திர மாநிலத்​தில் 4 அமைச்​சர்​களுக்கு நக்சலைட்டு​கள் மிரட்​டல் கடிதம் அனுப்​பி​யுள்​ள​தாக அமைச்​சர் துர்​கேஷ் கூறியது பெரும் பரபரப்பை ஏற்​படுத்தி உள்​ளது.

ஆந்​திர சட்​டப்​பேர​வை​யில் பட்​ஜெட் கூட்​டம் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்​கியது. காலை 10 மணிக்கு அவை தொடங்கியதும், ஆளுநர் அப்​துல் நசீர் அகமது உரையை வாசித்தார். அப்​போது, ஒய்​எஸ்​ஆர் காங்​கிரஸ் தலை​வரும் முன்னாள் முதல்​வரு​மான ஜெகன் மோகன் ரெட்டி உட்பட அக்கட்சியை சேர்ந்த 11 எம்எல்ஏ.க்​களும் பேர​வைக்​குள் வந்​தனர். அவர்​கள் வந்த போது ஆளும் கட்​சி​யினர், பாஜக, ஜனசேனா எம்​எல்​ஏக்​கள் திருப்​பதி தேவஸ்தானத்​தில் ஜெகன் ஆட்​சி​யில் நடை​பெற்ற கலப்பட நெய் விவகாரத்தை வெளிப்​படுத்​தும் வித​மாக ‘கோ​விந்தா கோவிந்​தா’ என கூச்​சலிட்​டனர்.

          

இதற்​கு, ஜெகன் கட்​சி​யினர் ‘ஜெய் ஜெகன்’ என பதில் குரல் கொடுத்​தனர். இதனால் அவை​யில் பரபரப்பு சலசலப்பு ஏற்பட்டது. உடனே, நாங்​கள் பேச அனு​மதி அளிக்க வேண்​டும் என்று ஜெகன் கட்சி எம்​எல்​ஏ.க்​கள் வலி​யுறுத்​தினர். ஆளுநர் உரை முடிந்த பின்​னர், மக்​கள் பிரச்​சனை குறித்து விவா​திக்​கலாம் என சபா​நாயகர் பல முறை கூறி​யும் அவர்​கள் கேட்​க​வில்​லை. உடனே தங்​களை பேச அனு​ம​திக்​க​வில்லை என்று கூறி வெளிநடப்பு செய்தனர்.

இதனை தொடர்ந்​து, பேரவை தலை​வர் அய்​யண்ண பாத்​ருடு செய்​தி​யாளர்​களிடம் பேசுகை​யில், இனி வியாழக்​கிழமை (இன்று) முதல் பேர​வை​யில் ஏஐ தொழில் ​நுட்​பம் மூலம் வருகை பதிவு செய்​யப்​படும். அந்த 11 பேர் (ஜெகன் எம்​எல்​ஏ.க்​கள்), 11ம் தேதி, 11 நிமிடங்​கள் மட்​டுமே இருந்​தனர்” என்று சிரித்​த​படி கூறி​னார்.

அமராவ​தி​யில் பேரவை கூட்​டத்​தின் இடையே அமைச்​சர் துர்கேஷ் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, ”நக்​சலைட்​டு​கள் அமைப்​பினர் பெயரில் ஆந்​திர அமைச்​சர்​கள் ரவீந்​தி​ரா, சத்​யகு​மார், சத்​யபிர​சாத் மற்​றும் எனக்கு என மொத்​தம் 4 பேருக்கு மிரட்டல் கடிதம் வந்​துள்​ளது. தனிப்​பட்ட முறை​யிலும், துறை சம்​பந்​த​மாக​வும் யாருக்​கும் எந்த பிரச்​சினை​களும் இல்​லை. ஆனால், மிரட்​டல் கடிதங்​கள் வந்​துள்​ளன. இது நக்​சலைட்​டு​கள் எழு​தி​ய​தா? அல்​லது நக்​சலைட்​டு​கள் பெயரை பயன்​படுத்தி வேறு நபர்கள் எழு​தி​னார்​களா என்​பது போலீஸ் வி​சா​ரணை​யில் தெரிய வரும்” என்று கூறி​னார்.

SCROLL FOR NEXT