இந்தியா

“பணி நிமித்தமாகவே என் மனைவி பாகிஸ்தான் சென்றார்” - கவுரவ் கோகோய் விளக்கம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: அசாம் மாநில காங்​கிரஸ் தலை​வர் கவுரவ் கோகோய் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: கடந்த 2013ம் ஆண்டு என் மனைவி எலிசபெத் கோல்​பர்ன் பணி நிமித்தமாக பாகிஸ்​தான் சென்​றிருந்​தார். அவருடன் நானும் சென்றேன். அப்​போது 10 நாட்​கள் அங்கு தங்கி இருந்​தோம்.

இது தொடர்​பாக விசா​ரிக்க அசாம் அரசு சிறப்பு விசா​ரணைக் குழு (எஸ்​ஐடி) அமைத்​தது. அக்​குழு என்​னிடம் ஒரு​ போதும் விசாரணை நடத்​த​வில்​லை. மேலும் எஸ்​ஐடி அறிக்கை சமர்ப்பித்து 6 மாதம் ஆகி​யும் இது​வரை முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்மா அமை​தி​யாக இருந்​தார். ஏனெனில் எங்​களுக்கு எதிராக எந்த ஆதா​ர​மும் கிடைக்​க​வில்​லை.

          

இந்​நிலை​யில் இப்​போது இந்த விவ​காரத்​தில் பொய்​யான குற்றச்சாட்​டு​களைக் கூறி, மத்​திய புல​னாய்வு அமைப்பு விசாரிக்க வேண்​டும் என கோரு​கிறார். தவறான தகவலை பரப்பும் அவர் மீது உச்ச நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து வழக்கு பதிவு செய்ய வேண்​டும். முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்மா குடும்பத்​தினரிடம் 12 ஆயிரம் பிகா நிலம் இருப்​பதை காங்​கிரஸ் கட்சி அம்​பலப்​படுத்​தி​யது. இதனால்​தான், முதல்​வர் சர்மா எங்​கள் மீது குற்​றச்​சாட்​டு​களை சுமத்​தி உள்​ளார்​. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

SCROLL FOR NEXT