இந்தியா

90 வயது மூதாட்டியின் அவதூறு வழக்கில் 20 ஆண்டுக்கு பிறகு விசாரணையா? - மறுநாளில் உத்தரவை மாற்றிய ஐகோர்ட்

செய்திப்பிரிவு

மும்பை: மூதாட்டி தாக்​கல் செய்த அவதூறு வழக்கை 20 ஆண்டுகள் கழித்​து விசா​ரிக்கப்​படும் என்ற உத்தரவை மறுநாளில் மாற்றி மும்பை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

மும்​பையைச் சேர்ந்த தாரிணிபென் (90), த்வனி தேசாய் (57) ஆகியோர் கடந்த 2017ம் ஆண்டு கில்​கில்​ராஜ் பன்​சாலி மற்​றும் சிலருக்கு எதி​ராக உயர் நீதி​மன்​றத்​தில் ஒரு மனு தாக்​கல் செய்தனர். 2015ம் ஆண்டு ஷியாம் கூட்​டுறவு வீட்​டு ​வசதி சங்கத்தின் வரு​டாந்​திர பொதுக்​குழுக் கூட்​டத்​தின்​போது நடந்ததாகக் கூறப்​படும் சில சம்​பவங்​கள் தொடர்​பாக இந்த வழக்கு தொடரப்​பட்​டது.

இந்​தச் சம்​பவங்​கள் தங்​களுக்கு மன உளைச்​சலை​யும் துன்​பத்​தை​யும் ஏற்​படுத்​தி​ய​தாகக் கூறி​யுள்ள மனு ​தா​ரர்​கள், தங்​களுக்கு ரூ.20 கோடி இழப்​பீடு வழங்க உத்தரவிட வேண்​டும் என அம்​மனு​வில் கோரி உள்​ளனர்.

இந்த மனு நீதிபதி ஜிதேந்​திர ஜெயின் தலை​மையி​லான தனி நீதிபதி அமர்வு முன்பு நேற்று முன்​தினம் மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது நீதிபதி ஜிதேந்​திர ஜெயின் கூறிய​தாவது: தங்கள் வாழ்​வின் இறு​திக்​கட்​டத்​தில் இருக்​கும் வழக்கு தாரர்களுக்கு இடையி​லான இந்த சட்​டப் போராட்​டம் ஒரு ‘ஈகோ யுத்​தம்’. நீதித்​துறை அமைப்பை முடக்​கும் ஏராள​மான வழக்குகளில் இது​வும் ஒன்​று.

இதன் விளை​வாக, உண்​மை​யிலேயே முன்​னுரிமை தேவைப்​படும் விஷ​யங்​களை நீதி​மன்​றத்​தால் கையில் எடுக்க முடி​யாமல் போகிறது. இந்த விவ​காரத்தை ஒரு மன்​னிப்பு மூலம் சுமூக​மாகத் தீர்த்​துக் கொள்​ளு​மாறு நீதி​மன்​றம் ஏற்​கெனவே அறிவுறுத்தியிருந்​தது. ஆனால், 90 வயதான மனு​தா​ரர் இந்த அவதூறு வழக்கை நடத்​து​வ​தில் பிடி​வாத​மாக இருக்​கிறார்.

மனு​தா​ரர் ஒரு ‘மிக மூத்த குடிமகள்' என்ற காரணத்​துக்​காக மட்டுமே இந்த வழக்​குக்கு முன்​னுரிமை அளிக்க முடி​யாது. இதைப் பற்றி நான் இதற்கு மேல் எது​வும் சொல்ல விரும்​ப​வில்​லை. இந்த வழக்கு அடுத்த 20 ஆண்​டு​களுக்கு விசா​ரணைக்கு எடுத்​துக் கொள்​ளப்பட மாட்​டாது. இதனை 2046-க்கு பிந்​தைய தேதி​யில் பட்டியலிடுங்​கள்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​. இந்நிலையில் இந்த வழக்கு வரும் ஜூலை 15ம் தேதி விசாரிக்கப்படும் என நேற்று நீதிபதி அறிவித்தார்.

SCROLL FOR NEXT