இந்தியா

மேற்கு வங்கத்தின் புரூலியாவில் மாவோயிஸ்ட் சுவரொட்டிகள் மீட்பு

செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்கு வங்​க மாநிலம் புரூலியா மாவட்​டத்​தின் பலராம்​பூர் காவல் நிலைய எல்​லைக்​குட்​பட்ட காட்​பெ​ரா-கெருவா பகு​தி​யில் மாவோயிஸ்ட் சுவரொட்​டிகள் கண்​டெடுக்​கப்​பட்​டன.

வெள்ளை காகிதத்​தில் சிவப்பு மையால் எழுதப்​பட்ட இந்த சுவரொட்​டிகளில் பாரம்​பரிய மாவோ​யிஸ்ட் தகவல் தொடர்​பு​களை போன்ற முழக்​கங்​களும் செய்​தி​களும் இடம்​பெற்​றிருந்​தன. சிபிஐ (மாவோ​யிஸ்ட்) என்ற பெயரில் அவை கையெழுத்திடப்பட்டிருந்​தன.

ஜங்​கல்​மஹால் பகு​தி​யில் முறை​யான சாலை வசதி, வேலை​வாய்ப்​பு, குடி​யிருப்​பு​கள், வீடு ஒதுக்​கீட்டு முறை​கேடு​கள் குறித்து விசா​ரணை போன்ற கோரிக்​கைகள் முன் வைக்​கப்​பட்​டிருந்​தன.

          

மேலும் உள்​ளூர் பஞ்​சா​யத்து பிர​தி​நி​தி​கள் மற்​றும் ஒன்​றிய அளவிலான அதி​காரி​களுக்கு எச்​சரிக்​கைகளும் விடுக்கப்பட்டுள்ளன. சட்​ட​விரோத மது விற்​பனை மற்​றும் வனப்​பகு​தி​களில் சட்​ட​விரோத​மாக மரம் வெட்​டு​வதைத் தடுக்​கக் கோரி​யும், வனத்​துறை அதி​காரி​களுக்கு அச்​சுறுத்​தல் விடுத்​தும் சுவரொட்​டிகள் காணப்​பட்​டன.

போலீ​ஸாரும் மத்​திய பாது​காப்பு படை​யினரும் விரைந்து சென்று இந்த சுவரொட்​டிகளை அகற்​றினர். இதன் உண்​மைத் தன்மை குறித்​தும் இதற்​குப் பின்​னணி​யில் இருப்​பவர்​கள் பற்​றி​யும் போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டுள்​ளனர்.

மேற்கு வங்​கத்​தில் தேர்​தல் நெருங்கி வரும் வேளை​யில், இந்த விவ​காரத்தை பாது​காப்பு படை​யினர் தீவிர அச்​சுறுத்​தலாக கரு​தி, அப்​பகு​தி​யில் ரோந்​துப் பணி மற்​றும் கண்​காணிப்​பை தீவிரப்​படுத்​தி​யுள்​ளனர்​.

SCROLL FOR NEXT