முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் முதல் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டதையொட்டி காங்கிரஸ் தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது: பணிவு, நேர்மை, புத்திகூர்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியவர் மன்மோகன் சிங். நாட்டின் பொருளாதாரப் பாதையை மறுவடிவமைத்து பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்தியவர். கோடிக்கணக்கான மக்களை வறுமையிலிருந்து மீட்டவர்.
மன்மோகன் சிங்கின் தொலைநோக்கு பார்வையின் கீ்ழ் நாங்கள் ஒரு வலிமையான இந்தியாவை உருவாக்கினோம். இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி கூறுகையில், “தொலைநோக்கு பார்வை கொண்ட அவர் இந்தியாவை பொருளாதார ரீதியாக வலுப்படுத்தினார். பின்தங்கிய மற்றும் ஏழை மக்களுக்காக அவர் மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சிகளும், துணிச்சலான முடிவுகளும் உலக அரங்கில் இந்தியாவுக்கு புதிய அடையாளத்தை பெற்றுத் தந்தது. அவரது பணிவு, கடின உழைப்பு, நேர்மை எப்போதும் நம் அனைவருக்கும் உத்வேகமாக இருக்கும்’’ என்று தெரிவித்தார்.