இந்தியா

தேர்தலில் சீட் வாங்கித் தருவதாக ரூ.25 லட்சம் மோசடி செய்தவர் கைது

செய்திப்பிரிவு

டேராடூன்: பஞ்​சாப் மாநிலம் அமிர்​தசரஸை சேர்ந்​தவர் கவுரவ் குமார் (42). இவர் தன்னை ராகுல் காந்​தி​யின் உதவி​யாளர் என்​றும், தன்​னால் தேர்​தலில் சீட், கட்​சிப் பதவி வாங்​கிக் கொடுக்க முடி​யும் என்​றும் காங்​கிரஸ் கட்​சி​யைச் சேர்ந்த நிர்​வாகி​களிடம் கூறி வந்​துள்​ளார்.

இந்​நிலை​யில் உத்​த​ராகண்ட் மாநில காங்​கிரஸ் நிர்​வாகி​யான பாவனா பாண்டே என்​பவரிடம் ரூ.25 லட்​சத்தை கவுரவ் குமார் பெற்​றுள்​ளார். அவருக்கு ராகுல் காந்​தி​யிடம் கூறி தேர்​தலில் சீட் பெற்​றுத் தரு​வ​தாக ஏமாற்​றி​யுள்​ளார்.

தன்​னிடம் கனிஷ்க் சிங் என்ற பெயரில் அவர் அறி​முக​மாகி பணத்தை ஏமாற்​றி​யுள்​ள​தாக டேராடூன் போலீ​ஸில் பாவனா பாண்டே புகார் அளித்​தார். இதைத் தொடர்ந்து கவுரவ் குமாரை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். அவர் இதே​போல் கோவா, உத்​தராகண்ட், பிஹார் உள்​ளிட்ட மாநிலங்​களி​லும் மோசடி செய்​துள்​ள​து தெரியவந்​துள்​ளது.

SCROLL FOR NEXT