இந்தியா

மேற்கு வங்க மாநில முஸ்லிம்களின் சூழல் மாறுகிறதா? - எஸ்ஐஆர் உள்ளிட்ட காரணங்களால் மம்தா கவலை

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: மேற்கு வங்​கத்​தில் எஸ்​ஐஆர் பணிக்​குப் பிறகு சுமார் 91 லட்​சம் வாக்​காளர்​கள் நீக்​கப்​பட்​டுள்​ளனர். இவர்​களில் 34 சதவீதம் பேர் முஸ்​லிம்​கள். மாநிலத்​தின் மொத்த மக்​கள் ​தொகையில் முஸ்​லிம்​களின் விகிதம் சுமார் 30 சதவீதம்.

இந்​தச் சூழலில், முஸ்​லிம் வாக்​காளர் எண்​ணிக்​கை​யில் சுமார் 5 சதவி​கிதம் வரை குறைந்​துள்​ளது. இந்த மாற்​றங்​கள் தேர்​தலில் பெரும் தாக்​கத்தை ஏற்​படுத்​தும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. கடந்த 2021 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி), பாஜக.வுக்​கான வாக்கு சதவீத இடைவெளி சுமார் 8 சதவீத​மாக இருந்​தது.

இந்​நிலை​யில், டிஎம்​சி​யின் முக்​கிய முஸ்​லிம் ஆதரவு சுமார் 3 சதவீதம் சரிந்​து, அதனுடன் ஆளும் கட்​சிக்கு எதி​ரான மக்​கள் மனநிலை​யும் இணைந்​தால் டிஎம்​சி-க்​குக் கடும் போட்டி ஏற்​படும். கடந்த 2021-ல், 5 சதவீதத்​துக்​கும் குறை​வான வாக்கு வித்தியாசத்தில் டிஎம்சி 37 தொகு​தி​களில் வென்​றது.

இதனால், முஸ்​லிம் வாக்​காளர்​களின் எண்​ணிக்கை 10,000 முதல் 20,000 வரை குறைந்​தால், அந்த தொகு​தி​யில் டிஎம்​சி​யின் வெற்றியை நேரடி​யாகப் பாதிக்​கும். உதா​ரண​மாக, நாடியா மாவட்​டத்​தின் கரீம்​பூர் தொகு​தி​யில் சுமார் 12,000 வாக்​கு​கள் வித்தி​யாச​மும், முர்​ஷி​தா​பாத் மாவட்ட தம்​கல் தொகு​தி​யில் சுமார் 47,000 வாக்​கு​கள் வித்​தி​யாச​மும் இருந்​தது. 5 சதவிகிதத்துக்கும் குறை​வான வாக்கு வித்​தி​யாசத்​தில் வேறு பல தொகு​தி​களி​லும் டிஎம்சி வெற்றி பெற்​றிருந்​தது.

இந்த முறை வாக்​காளர் பட்​டியலில் இருந்து சுமார் 40,000 பேர் நீக்கப்​பட்​டுள்​ளனர். மம்தா பானர்ஜி மீண்​டும் போட்​டி​யிடும் பவானிபூர் தொகு​தி​யிலும் ஏராள​மானோர் நீக்​கப்​பட்​டுள்​ளனர். அதே​போல் வெற்​றியைத் தீர்​மானிக்​கும் முஸ்​லிம்​கள் எண்ணிக்கை அதி​கம் உள்ள முர்​ஷி​தா​பாத், மால்டா மற்​றும் வடக்கு தினாஜ்பூரில் தேர்​தல் களம் வேறு மாதிரி​யாக உள்​ளது.

இங்கு காங்​கிரஸ் தலை​வர் ஆதிர் ரஞ்​சன் சவுத்​ரி​யின் செல்​வாக்கு வலு​வாக உள்​ளது. ‘முஸ்​லிம்​களுக்கு பாஜக மிகப்​பெரிய அச்சுறுத்தலாக உள்​ளது. அதை மம்​தா​வால் மட்​டுமே கட்​டுக்​குள் வைத்​திருக்க முடி​யும்’ என்ற கருத்​தும் உள்​ளது. ஆனால், டிஎம்​சி. யில் இருந்து வெளி​யேறி புதிய கட்சி தொடங்​கி​யுள்ள ஹுமாயூன் கபீர், அரசி​யலில் முஸ்​லிம்​களுக்கு அதி​காரப் பங்​கீடு தேவை என்ற கருத்தை வலி​யுறுத்தி வரு​கிறார். இதனால் முஸ்​லிம்​கள் மாற்று வழியை​யும் சிந்​திக்​கின்​றனர்.

இந்​தப் பட்​டியலில் ஹைதரா​பாத் எம்​.பி.அசதுதீன் ஒவைசி​யின் ஏஐஎம்​ஐஎம் கட்​சி​யும் உள்​ளது. இவர் போன்ற தலை​வர்​கள், முஸ்லிம் சமூகத்தை வலுப்​படுத்​து​வது ஒரு​புறம் இருக்க, அமைச்சர்​களாகப் பொறுப்பு வகிக்​கும் பர்​ஹத் ஹக்​கீம், சித்​தி​குல்லா சவுத்ரி ஆகிய இரு​வருக்​கும் கூட எந்த அதி​கார​மும் டிஎம்சி ஆட்​சி​யில் இல்லை எனச் சுட்​டிக் காட்​டு​கின்​றனர்​.

இது​போன்​ற ​காரணங்​களால்​ 2026 தேர்​தலில்​ முஸ்​லிம்​ ​வாக்​​காளர்​களின்​ மனநிலை ​மாறி​யுள்​ளது. இது தேர்​தலில்​ எதிரொலிக்​கும்​ போது மம்​​தாவுக்​குப்​ பெரும்​ பின்​னடை​வாக இருக்​கும்​ என்​று கூறுகின்றனர்​.

SCROLL FOR NEXT