இந்தியா

அதிருப்தியாளர்கள் முகாமில் இணைந்த மம்தா ஆதரவாளர்

செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்கு வங்​கத்​தில் சமீபத்​தில் நடை​பெற்ற சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்​தது.

இதையடுத்​து, அக்​கட்​சித் தலை​வரும் முன்னாள் முதல்வருமான மம்தா பானர்ஜிக்கு எதி​ராக மூத்த தலை​வர்​கள் போர்க்​கொடி தூக்​கினர். குறிப்​பாக, மொத்​தம் உள்ள 80 எம்​எல்​ஏ-க்​களில் ரிதப்ரதா பானர்ஜி தலை​மை​யில் சுமார் 60 பேர் பிரிந்து சென்று நாங்கள்​தான் உண்​மை​யான திரிண​மூல் என்று பேர​வை​யில் அறிவித்துக் கொண்​டனர்.

இந்​நிலை​யில், மம்தா பானர்​ஜி​யின் தீவிர ஆதர​வாள​ரும் முன்னாள் அமைச்​சரு​மான மதன் மித்ரா நேற்று ரிதப்​ரதா பானர்ஜி தலை​மையி​லான அதிருப்​தி​யாளர்​கள் முகாமில் இணைந்​தார்.

நகராட்​சிப் பணி நியமன ஊழல் தொடர்​பான பண மோசடி வழக்கில், மதன் மித்​ரா​வின் மனைவி மற்​றும் அவரது இரு மகன்களுக்கு அமலாக்​கத்​துறை சம்​மன் அனுப்​பிய அடுத்த நாளே இந்த மாற்​றம் நிகழ்ந்​துள்​ளது. மதன் மித்​ரா​வின் வில​கல் மம்தாவுக்​குப் பெரிய இழப்​பாகக் கருதப்​படு​கிறது.

SCROLL FOR NEXT