இந்தியா

பவானிப்பூரில் மீண்டும் வெற்றிக்கொடி நாட்ட மம்தா திட்டம்: கடும் சவாலாக விளங்கும் பாஜக தலைவர்கள்

செய்திப்பிரிவு

கொல்கத்தா: கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்​க சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலை​மையி​லான திரிண​மூல் காங்​கிரஸ் வெற்றி பெற்​றது. ஆனால், நந்​தி​கி​ராம் தொகு​தி​யில் போட்​டி​யிட்ட மம்​தா, பாஜக மூத்த தலை​வர் சுவேந்து அதி​காரி​யிடம் தோல்​வியடைந்​தார். இதையடுத்து பவானிப்​பூர் தொகு​திக்கு நடை​பெற்ற இடைத்​தேர்​தலில் மம்தா வெற்றி பெற்று முதல்​வ​ராக இருந்து வரு​கிறார்.

இந்​நிலை​யில் இந்​தத் தேர்​தலில் மீண்​டும் அவர் பவானிப்​பூர் தொகு​தி​யில் களமிறங்​கு​கிறார். இதைத் தொடர்ந்து கடந்த தேர்​தலைப் போல​வே, இந்​தத் தேர்​தலிலும் மம்​தாவுக்கு நெருக்​கடி தர பாஜக மேலிடம் ஆயத்​த​மாகி வரு​கிறது.

          

இம்​முறை​யும், முதல்​வர் மம்​தாவை எதிர்த்து களமிறங்க சுவேந்து அதி​காரி முடிவு செய்​துள்​ளார். ஆரம்​பம் முதல் திரிண​மூல் காங்​கிரஸில் இருந்​தவர்​தான் இந்த சுவேந்து அதி​காரி. 2021-ம் ஆண்டு தேர்​தலுக்கு முன்​ன​தாக மம்​தாவுடன் ஏற்​பட்ட கருத்து வேறு​பாட்​டால் கட்​சியி​லிருந்து விலகி பாஜக​வில் சேர்ந்​தார். 2021 முதல் மேற்கு வங்க எதிர்க்​கட்​சித் தலை​வ​ராக நீடித்து வரு​கிறார்.

2021 பவானிப்​பூர் இடைத்​தேர்​தலில் மம்தா போட்​டி​யிட்டு 71% வாக்​கு​களை அள்​ளி​னார். பாஜக வேட்​பாளர் பிரி​யங்கா திப்​ரே​வாலை விட 58 ஆயிரம் வாக்​கு​கள் அதி​கம் பெற்று வெற்றி கண்​டார். எனவே, இந்​தத் தேர்​தலிலும் அவர் எளிதாக வெற்றி பெறுவார் என அரசி​யல் நோக்​கர்​கள் கருதுகின்​றனர். அதே​நேரத்​தில் மம்தாவின் வெற்​றிக்கு முட்​டுக்​கட்டை போட பாஜக தொண்​டர்​கள் தீவிர​மாக களமிறங்​கி​யுள்​ளனர்.

இதனிடையே, வாக்​காளர் சிறப்பு தீவிர திருத்​தத்​தின்​போது இந்​தத் தொகு​தியி​லிருந்து 40 ஆயிரம் வாக்​காளர்​கள் நீக்​கப்​பட்​டு​விட்​டனர். உயிரோடு இருக்​கும் பலரின் வாக்​கு​களை தேர்​தல் ஆணை​யம் நீக்​கி​விட்​டது என்று திரிண​மூல் காங்​கிரஸ் குற்​றம்​சாட்​டி​யுள்​ளது. இருந்​த​போதும் சிறு​பான்​மை​யினரின் ஆதர​வுடன் மம்​தாவை வெற்றி பெறச் செய்​ய திரிண​மூல்​ காங்​கிரஸார்​ கங்​கணம்​ கட்​டி களத்​தில்​ குதித்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT