இந்தியா

ஊடுருவல்காரர்களை காப்பாற்ற மம்தா பானர்ஜி முயற்சி: அமித் ஷா குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மேற்​கு​வங்​கத்​தில் ஊடுரு​வல்​காரர்​களை காப்​பாற்ற முதல்​வர் மம்தா முயற்​சிக்​கிறார் என்று மத்​திய அமைச்​சர் அமித் ஷா குற்​றம் சாட்டி உள்​ளார்.

மேற்​கு​வங்​கத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி (எஸ்​ஐஆர்) நடை​பெற்று வரு​கிறது. இதுதொடர்​பாக முதல்​வர் மம்தா பானர்ஜி தலை​மைத் தேர்​தல் ஆணை​யத்​துக்கு அனுப்​பிய கடிதத்​தில், “வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணி முறை​யாக திட்​ட​மிடப்​பட​வில்​லை. இது மிகுந்த குழப்​பம் நிறைந்​த​தாக இருக்​கிறது. திருத்​தப் பணி​யால் பொது​மக்​கள் தங்​களின் வாக்குரிமையை இழக்க நேரிடும். பணிச்​சுமை காரண​மாக தேர்தல் அலு​வலர்​கள் தற்​கொலை செய்து வரு​கின்​றனர். எனவே எஸ்ஐஆர் பணியை நிறுத்த வேண்​டும்’’ என்று குறிப்​பிட்டு இருந்​தார்.

இதற்கு பதில் அளிக்​கும் வகை​யில் உள்​துறை அமைச்​சர் அமித் ஷா சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில், “இந்​தி​யாவின் பாது​காப்பு மட்​டுமன்றி ஜனநாயகத்தை காப்​பாற்​ற​ வெளிநாட்டினர் ஊடுரு​வலை தடுத்து நிறுத்த வேண்​டியது அவசி​யம். ஆனால் சில அரசி​யல் கட்​சிகள் (மம்தா) ஊடுரு​வல்​காரர்​களை காப்​பாற்ற முயற்சி செய்​கின்​றன. அந்த கட்​சிகள் மீது தேர்​தல் ஆணை​யம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும்’’ என்று குறிப்​பிட்டு உள்​ளார்.

இதுகுறித்து எல்லை பாது​காப்பு படை வட்​டாரங்​கள் கூறுகையில், ‘‘வங்​கதேசத்​தில் இருந்து ஏராள​மானோர் மேற்​கு​வங்​கத்​துக்​குள் ஊடுருவி உள்​ளனர். தற்​போது வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணி நடை​பெறு​வ​தால் வங்​கதேச மக்​கள் அச்​சமடைந்து சொந்த நாட்​டுக்கு தப்​பிச் செல்ல தீவிர முயற்சி செய்து வரு​கின்​றனர். இந்​தி​யா​வில் கிரிமினல் குற்​றங்​களில் ஈடு​ப​டாத நபர்​கள் மட்​டும் வங்​கதேச எல்​லைப் பாது​காப்பு படை​யினரிடம் ஒப்​படைக்​கப்​படு​கின்​றனர்’’ என்றனர்.

SCROLL FOR NEXT