இந்தியா

ரவுடி பாபா ஃபர்சான் வீட்டில் ரூ.5.2 கோடி, ஆயுதங்கள் பறிமுதல்: மகாராஷ்டிராவில் போலீஸார் நடவடிக்கை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ம​கா​ராஷ்டி​ரா​வில் பிரபல ரவுடி பாபா ஃபர்​சானின் ஆடம்பர பங்​களா​வில் நடத்​திய சோதனை​யில் கட்​டுக்​கட்​டாக பணம் மற்​றும் ஆயுதங்​களை போலீ​ஸார் பறி​முதல் செய்துள்ளனர்.

மகா​ராஷ்டிர மாநிலம் சத்​ரபதி சம்​பாஜிநகர் மற்​றும் அதன் சுற்​று​வட்​டாரப் பகு​தி​களில், 1990-களில் பிரபல ரவுடி​யாக வலம் வந்​தவர் பாபா ஃபர்​சான். கட்டப் பஞ்​சா​யத்​து, மிரட்டி பணம் பறித்​தல் மற்​றும் நில தகராறுகளைத் தீர்ப்​பது உள்​ளிட்ட சட்​ட​விரோத செயலில் ஈடு​பட்டு வந்​தார். இவர் மீது கொலை முயற்​சி, ஆட்​கடத்​தல், கலவரம் செய்​தல் உள்​ளிட்ட பல்​வேறு குற்​றச்​சாட்​டு​கள் சுமத்​தப்​பட்​டிருந்​தன.

இந்​நிலை​யில் உடல்​நலக்​குறைவு மற்​றும் முதுமை காரண​மாக கடந்த 6 மாதங்​களுக்கு முன்பு ஃபர்​சான் கால​மா​னார். அவருக்கு சொந்​த​மான பங்​களா மற்​றும் அவருடன் தொடர்​புடைய இடங்​களில் குற்​றப் பிரிவு காவல் துறை அதி​காரி​கள் நேற்று சோதனை மேற்​கொண்​டனர். அப்​போது ஃபர்​சானின் 2-வது மனைவி ஷீலா கணபத்​ராவ் சால்வே (52) அங்கு இருந்​தார்.

இந்த சோதனை​யில், மொத்​தம் ரூ.5,26,29,560 கணக்​கில் வராத ரொக்​கப் பணத்தை அதி​காரி​கள் கண்​டெடுத்​தனர். இதில் ரூ.100 மற்​றும் ரூ.200 நோட்​டு​களும், சிறிய கட்​டு​களாகக் கட்​டப்​பட்​டிருந்த பெரு​மளவி​லான ரூ.50, ரூ.20 மற்​றும் ரூ.10 நோட்​டு​களும் அடங்​கும். துல்​லிய​மான தொகை​யைக் கணக்​கிட அதி​காரி​கள் ஐந்து பணம் எண்​ணும் இயந்​திரங்​களைக் கொண்​டுவர வேண்​டி​யிருந்​தது.

மேலும், அந்த வீட்​டில் ரூ.5,50,000 மதிப்​புள்ள பெரு​மளவி​லான ஆயுதங்​களை​யும் அவர்​கள் கண்​டெடுத்​தனர். இதில் மேகசின்​களு​டன் கூடிய 2 பிஸ்​டல்​கள், 4 துப்​பாக்​கி​கள், 12-​போர் துப்​பாக்​கி​கள், 2 ஏர் துப்​பாக்​கி​கள், ஒரு.22 துப்​பாக்​கி, ஒரு வாள், 17 வகை​யான கத்​தி​கள் மற்​றும் 21 இதர கூர்​மை​யான ஆயுதங்​கள் இருந்​தன.

முதற்​கட்ட விசா​ரணை​யில், 12-​போர் மற்​றும் 0.22 மிமீ துப்​பாக்​கி​கள், ஒரு பிஸ்​டல் மற்​றும் ஒரு ரிவால்​வர் ஆகிய​வற்​றுக்​கான உரிமங்​கள் பாபா ஃபர்​சானின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரிய​வந்​தது.

ஃபர்​சானின் வீட்​டில் இருந்து மீட்​கப்​பட்ட நிதி ஆவணங்​கள், வங்​கிக் கணக்​கு​கள் மற்​றும் பினாமி சொத்​துக்​கள் தொடர்​பான ஆவணங்​கள் மூலம், 1990-களின் பல தீர்க்​கப்​ப​டாத குற்​ற​வியல் வழக்​கு​களின் பின்​னணி​களை வெளிக்​கொண்டு வர முடி​யும் என்​று அதி​காரி​கள்​ நம்​புகின்​றனர்​.

SCROLL FOR NEXT