இந்தியா

பாது​காப்​புப் படை​யினருடன் துப்​பாக்​கிச் சண்டை: காஷ்மீரில் லஷ்கர் தீவிரவாதி உயிரிழப்பு

செய்திப்பிரிவு

ஸ்ரீநகர் தெற்கு காஷ்மீரின் சோபி​யான் பகு​தி​யில் பாது​காப்​புப் படை​யினருடன் நடை​பெற்ற துப்​பாக்​கிச் சண்​டை​யில் லஷ்கர்​-இ-தொய்பா அமைப்​பைச் சேர்ந்த தீவிர​வாதி ஜாகீர் அகமது கனாய் சுட்​டுக்​கொல்​லப்​பட்ட நிலை​யில், அவரது உடல் 3 நாட்​களுக்​குப் பிறகு நேற்று காலை மீட்​கப்​பட்​டுள்​ளது.

சோபி​யான் மாவட்​டத்​தின் சன்​னா​போரா கிராமத்​தில் தீவிரவாதிகள் பதுங்​கி​யிருப்​ப​தாகக் கிடைத்த ரகசி​யத் தகவலின் பேரில், கடந்த சனிக்​கிழமை மாலை ஜம்​மு-​காஷ்மீர் போலீஸ், ராணுவம் மற்​றும் துணை ராணுவப் படை​யினர் இணைந்து தீவிர தேடு​தல் வேட்​டையைத் தொடங்​கினர். அப்​போது, தேடப்​பட்டு வந்த ஜாகீர் மற்​றும் அவரது கூட்​டாளி​யான லத்​தீப் ஆகிய இரு தீவிர​வா​தி​களின் நடமாட்​டம் அங்​குள்ள கண்​காணிப்​புக் கேமராவில் பதி​வாகி​யிருந்​தது.

பாது​காப்​புப் படையினர் கிராமத்​திற்​குள் சோதனையைத் தீவிரப்படுத்​தி​ய ​போது, அங்கு மறைந்​திருந்த தீவிர​வா​தி​கள் திடீரென துப்​பாக்​கிச் சூடு நடத்​தி​ய​தால் இருதரப்​புக்​கும் இடையே கடுமையான சண்டை வெடித்​தது. இரவு நேரத்​தைக் கருத்​தில் கொண்டு அந்​தப் பகு​தி​யில் தேடு​தல் நடவடிக்கை தற்​காலிக​மாக நிறுத்தப்பட்​ட​போது தீவிர​வா​தி​கள் தப்​பியோடிய​தாகக் கருதப்பட்ட நிலையில், அடுத்தநாள் கூட்​டுப் படை​யினர் மீண்​டும் தேடுதல் வேட்டையைத் தொடங்​கினர்.

அப்​போது கிராமத்​தில் உள்ள ஒரு மாட்​டுத் தொழு​வத்​திலிருந்து திடீரென துப்​பாக்​கிச் சூடு சத்​தம் கேட்​டது. அதனைத் தொடர்ந்து பாது​காப்​புப் படை​யினர் நடத்​திய எதிர் தாக்​குதலில் ஜாகீர் அகமது கனாய் கொல்​லப்​பட்​டதாக கூறப்படுகிறது. பின்​னர் நேற்று காலை அவரது உடல் அங்​கிருந்து மீட்​கப்​பட்​டது. இந்த வெற்​றிகர​மான நடவடிக்கை குறித்து ஜம்​மு-​ காஷ்மீர் காவல்துறை தனது எக்ஸ் தளப் பதி​வில், “நீங்​கள் ஓடலாம், ஆனால் ஒளிய முடி​யாது! சோபி​யான் சிறப்பு அதிரடிப்​படை, ராஷ்டிரிய ரைபிள்ஸ் மற்​றும் சிஆர்​பிஎஃப் படை​யினருடன் இணைந்து நடத்​திய தாக்​குதல் நடவடிக்​கை​யில் ஒரு லஷ்கர் தீவிரவாதி கொல்​லப்​பட்​டார்” என்று குறிப்​பிட்​டுள்​ளது.

காவல் ​துறைப் பதிவேடு​களின்​படி காஷ்மீர் பள்​ளத்​தாக்​கில் எஞ்சியிருந்த இரு உள்​ளூர் தீவிர​வா​தி​களில் ஜாகீரும் ஒரு​வர் என்பது குறிப்​பிடத்​தக்​கது. தப்​பியோடிய மற்​றொரு தீவிர​வாதியான லத்தீப் என்​பவரும் இதே பகு​தி​யில் பதுங்கியிருக்கலாம் என நம்பப்படு​வ​தால், பாது​காப்​புப் படையினர் தங்​களது தேடு​தல் வேட்​டையை மேலும் தீவிரப்படுத்தி​யுள்​ளனர்.

காஷ்மீர் பள்​ளத்​தாக்​கில் கடந்த ஆண்டு அக்​டோபர் மாதம் குல்காம் மாவட்​டத்​தில் இரண்டு தீவிர​வா​தி​கள் கொல்லப்பட்டதற்குப் பிறகு, இந்த ஆண்​டில் பாது​காப்​புப் படையினருக்​கும், தீவிர​வா​தி​களுக்​கும்​ இடையே நடை​பெற்​ற முதல்​ துப்​​பாக்​கிச்​ சண்​டை மற்​றும்​ இதில்​ கொல்​லப்​பட்​ட முதல்​ தீவிர​வா​தி ஜாகீர்​ அகமது க​னாய்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT