இந்தியா

குடியரசு தின விழாவில் கேரள அமைச்சர் மயக்கம்

செய்திப்பிரிவு

கன்னூர்: ​நாட்​டின் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு கேரளாவில் நேற்று நடந்த விழா​வில் பங்​கேற்ற காங்​கிரஸ் (மதச்சார்​பற்ற) கட்​சி​யின் தலை​வரும், கேரள அமைச்​சரு​மான காடனபள்ளி ராமச்​சந்​திரன் (82) மயக்​கமடைந்​தார்.

இதுகுறித்து காவல் துறை அதி​காரி​கள் கூறுகை​யில், ”கன்​னூர் மைதானத்​தில் குடியரசு தின விழாவுக்​காக ஏற்​பாடு செய்​திருந்த நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற அமைச்​சர் ராமச்​சந்​திரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீஸ் மரி​யாதையை ஏற்​றார். அப்போது நிகழ்ச்சி முடிவடையும் நேரத்​தில் அவருக்கு மயக்​கம் ஏற்​பட்​டது. இதையடுத்து ஆம்​புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டார்” என்​றனர்.

          
SCROLL FOR NEXT