இந்தியா

கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு

இரா.வினோத்

பெங்களூரு: கர்​நாடக மாநிலம் சிக்​கமகளூரு​வில் காணா​மல் போன கேரள சிறுமி 4 நாட்​களுக்கு பிறகு 1,500 அடி ஆழ பள்ளத்தாக்​கில் இருந்து சடல​மாக மீட்​கப்​பட்​டார்.

கேரள மாநிலம் பாலக்​காட்டை சேர்ந்த ஸ்ரீநந்தா (15), கடந்த 7-ம் தேதி தனது பெற்​றோர், உறவினர்​கள் 40 பேருடன் கர்​நாடகா​வுக்கு சுற்​றுலா வந்​தார். அன்று மாலை 6 மணி​யள​வில் சிக்​கமகளூரு​வில் உள்ள சந்​திரோனா மலைப்​பகு​திக்கு அனை​வரும் சென்று இயற்​கையை ரசித்​துக் கொண்​டிருந்​தனர். அதன்​பிறகு ஸ்ரீநந்​தா, மாணிக்​தாரா அருவிக்கு அரு​கில் சென்று புகைப்​படம் எடுத்​துக் கொண்​டிருந்​தார். மாலை 7 மணி​யள​வில் இருட்​டிய நேரத்​தில் ஸ்ரீநந்தா காணா​மல் போனது தெரிய வந்​தது. இதையடுத்து அவரது பெற்​றோர் சிக்​கமகளூரு காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தனர்.

          

சிக்​கமகளூரு காவல் கண்​காணிப்​பாளர் ஜிதேந்​திரகு​மார், வனத்​துறை, தீயணைப்​புத் துறை மற்​றும் மீட்​புப் படை​யினர் அடங்​கிய 60 குழுக்​களை அமைத்து தேடு​தல் வேட்​டையைத் தொடங்​கி​னார். இரவும் பகலு​மாக நடந்த தேடு​தல் வேட்​டை​யில், மனிதர்​கள் செல்ல முடி​யாத செங்​குத்​தான பள்​ளத்​தாக்​குப் பகு​தி​களில் தேடு​வதற்கு அதிநவீன ட்ரோன்​கள் பயன்​படுத்​தப்​பட்​டன.

இந்​நிலை​யில் நேற்று முன்தினம் மாலை 1,500 அடி பள்​ளத்​தாக்​கில் சிறுமி சடல​மாக மீட்​கப்​பட்​டார். அவரது உடலை கண்டு பெற்​றோரும் உறவினர்​களும் கண்​ணீர் விட்டு அழும் காட்சி சோகத்தை ஏற்​படுத்​தி​யது.

இந்த சம்​பவம் குறித்து சிக்​கமகளூரு காவல் கண்​காணிப்​பாளர் ஜிதேந்​திரகு​மார் கூறுகை​யில், ‘‘பிரேதப் பரிசோதனைக்​குப் பிறகு சிறுமி​யின் உடல் பெற்​றோரிடம் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளது. அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்​வதற்கு தேவை​யான உதவி​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. இந்த மரணம் விபத்​தாக தெரிந்​தா​லும், பல்​வேறு கோணங்​களில் வி​சா​ரணை நடத்​தி வரு​கிறோம்​'' என்​றார்​.

SCROLL FOR NEXT