இந்தியா

ரூ.20 குடிநீர் பாட்டில் ரூ.100-க்கு விற்பது ஏன்? - கேதார்நாத் கோயில் வளாகத்தில் உள்ள வியாபாரி விளக்கம்

செய்திப்பிரிவு

டேராடூன்: உத்​த​ராகண்ட் மாநிலம், ருத்​ரபிர​யாக் மாவட்​டத்​தில் கேதார்​நாத் கோயில் அமைந்​துள்​ளது. சுமார் 11,755 அடி உயரத்தில் உள்ள இந்த கோயில் கோடை காலத்​தில் மட்​டுமே திறந்திருக்கும்.

கடந்த 22-ம் தேதி கேதார்​நாத் கோயில் நடை திறக்​கப்​பட்​டது. பல்வேறு மாநிலங்​களை சேர்ந்த மக்​கள் உத்​த​ராகண்​டின் கவுரிகுண்ட் பகு​தியை சாலை வழி​யாக சென்​றடைந்​து, அங்கிருந்து 16 கி.மீ. தொலைவு பாத​சா​ரி​யாக மலை​யேறி கேதார்நாத் கோயிலுக்கு செல்ல வேண்​டும்.

சில நாட்​களுக்கு முன்பு கோயில் வளாகத்​தில் உள்ள கடை​யில் பெண் பக்​தர் ஒரு​வர் குடிநீர் பாட்​டில் வாங்​கி​னார். ரூ.20 விலை குறிப்​பிடப்​பட்ட ஒரு லிட்​டர் பாட்​டிலுக்கு கடைக்​காரர் ரூ.100 வசூலித்​தார். எதற்​காக அதிக தொகை வாங்​கு​கிறீர்​கள் என்று பெண் பக்​தர் கேட்​ட​போது கடைக்​காரர் கூறிய​தாவது:

கேதார்​நாத் கோயில் 5 மாதங்​கள் வரை மட்​டுமே திறந்​திருக்​கும். கோயில் வளாகத்​துக்கு வரு​வதற்கு சாலை வசதி கிடை​யாது. இதனால் வாக​னங்​களில் பொருட்​களை கொண்டு வர முடி​யாது. கோவேறு கழுதைகள் அல்​லது தொழிலா​ளர்​கள் மூலம் மட்​டுமே பொருட்​களை கோயில் வளாகத்​துக்கு கொண்டு வர முடி​யும்.

ஒரு கோவேறு கழுதை​யில் 48 குடிநீர் பாட்​டில்​களை மட்​டுமே எடுத்து வர முடி​யும். அதற்கு ரூ.3,500 கட்​ட​ணம் வசூலிக்​கப்​படு​கிறது. ஒரு தொழிலாளி தனது முதுகில் 40 கிலோ எடையை மட்​டுமே சுமந்து வர முடி​யும். அவருக்கு ரூ.2,500 கூலி கொடுக்க வேண்​டும்.

இந்த செல​வைக் கணக்​கிட்டே ரூ.20 மதிப்​புள்ள ஒரு லிட்​டர் குடிநீர் பாட்​டிலுக்கு ரூ.80 முதல் ரூ.100 வரை வசூலிக்​கிறோம். எங்​களுக்கு குறை​வான லாபம் மட்​டுமே கிடைக்​கிறது. இவ்​வாறு கடைக்​காரர் தெரி​வித்​துள்​ளார்​. பெண்​ பக்​தர்​, கடைக்​​காரர்​ இடையி​லான இந்த உரை​யாடல்​ வீடியோ சமூக வலை​தளங்​களில்​ வைரலாக பரவி வருகிறது.

SCROLL FOR NEXT