கனிமொழி எம்.பி. | கோப்புப்படம் 
இந்தியா

“திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்ற முயற்சி” - பாஜக மீது கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

சென்னை: ​பாஜகவைச் சேர்ந்​தவர்​கள் திருப்​பரங்​குன்​றத்தை இன்​னொரு அயோத்​தி​யாக மாற்​றி​விட முயற்சி செய்து கொண்​டிருப்​ப​தாக திமுக நாடாளு​மன்ற குழு தலை​வர் கனி​மொழி குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.

டெல்​லி​யில், நேற்று இது குறித்து அவர் கூறிய​தாவது: திருப்​பரங்​குன்​றத்​தில் பல நூற்​றாண்​டு​களாக எந்​தப் பிரச்​சினை​யும் இல்​லாமல் மக்​கள் கோயிலுக்​குச் சென்று வழிபட்டு வரு​கின்​றனர்.

அதே நேரத்​தில் சிக்​கந்​தர் தர்கா​வுக்​கும் சென்று வழிபடு​கின்​றனர். இந்த மதநல்​லிணக்​கத்​தைச் சீர்​குலைக்​கும் வித​மாக மக்​களிடையே மத குரோதத்தை உரு​வாக்​கக்​கூடிய வித​மாக தேவை​யில்​லாமல் சிலர் பிரச்​னை​களை உரு​வாக்​கு​கின்​றனர்.

ஏற்​கெனவே இந்த விஷ​யத்​தில் நீதி​மன்​றம் தலை​யிட்டு தீர்ப்பு வழங்​கி​விட்​டது. இப்​போது நீதிபதி சுவாமி​நாதன் தேவை​யில்​லாமல் தலை​யிட்டு அரசை மீறி ஒரு தீர்ப்பை வழங்கிஇருக்​கிறார். தமிழக காவல் துறையைத் தாண்​டி, மத்​திய காவல்​படையை தீபம் ஏற்​று​வோருக்​குத் துணை​யாக அனுப்​பிவைக்​கிறார்.

இதை பயன்​படுத்​திக்​கொண்டு பாஜக மத கலவரத்தை உரு​வாக்க நினைத்​தது. பாஜகவைச் சேர்ந்​தவர்​கள் இதை இன்​னொரு அயோத்​தி​யாக மாற்​றி​விடவேண்​டும் என்று முயற்சி செய்கின்றனர். நாடாளு​மன்​றத்​தில் அமைச்​சர்​கள் கிரண் ரிஜிஜூ மற்​றும் எல்​.​முரு​கன் ஆகியோர் பேசி​யது கண்​டிக்​கத்​தக்​கது.

மனிதர்​கள் மனிதர்​களாக வாழக்​கூடிய ஒரு சூழ்​நிலையை குலைக்​கத்​தான் பாஜக பாடு​பட்​டுக்​ கொண்​டிருக்​கிறது, இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

SCROLL FOR NEXT