லக்னோ: உத்தர பிரதேச பேரவையின் குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்றது. இதன் இறுதி நாளான நேற்று முதல்வர் ஆதித்யநாத் பேசியதாவது:
கடந்த 2017-ம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்த பிறகு பல்வேறு விமான நிலையங்கள் கட்டப்பட்டன. இப்போது விமான நிலையங்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. இதில் 4 சர்வதேச விமான நிலையங்கள் ஆகும்.
தற்போது 5-வது சர்வதேச விமான நிலையம் நொய்டாவில் ஜனவரி மாதம் திறக்கப்பட உள்ளது. இது நாட்டிலேயே மிகப்பெரிய விமான நிலையமாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.