இந்தியா

நாட்டின் முதல் கடல் விமானம் ரிஷிகேஷில் வெற்றிகரமாக சோதனை

செய்திப்பிரிவு

ரிஷிகேஷ்: நாட்​டில் முதல் கடல் விமானம் ரிஷிகேஷில் உள்ள கங்கை தடுப்​பணை​யில் நேற்று வெற்​றிகர​மாக சோதனை செய்யப்​பட்​டது.

நாட்​டில் கடல் வழித்​தடம் மற்​றும் நீர்​நிலைகள் அதி​கள​வில் உள்ளன. விமான நிலை​யம் அமைக்க முடி​யாத இடங்​களில் கடல் விமான போக்​கு​வரத்தை ஏற்​படுத்தி சுற்​றுலாவை மேம்​படுத்த திட்​ட​மிடப்​படு​கிறது. இதன் ஒரு பகு​தி​யாக ரிஷிகேஷில் வர்த்தக ரீதி​யாக கடல் விமான போக்​கு​வரத்தை ஏற்​படுத்த ஸ்கை​ஹாப் ஏவி​யேஷன் என்ற நிறு​வனம் தயா​ராகி வரு​கிறது.

          

இந்​நிறு​வனத்​தின் கடல் விமானம் ரிஷிகேஷில் உள்ள கங்கை தடுப்​பணை​யில் கடந்த 6ம் தேதி தனது பரிசோதனையை வெற்றிகர​மாக முடித்​தது. கடல் விமானம் கங்கை நதி​யில் சுமூகமாக தரை​யிறங்​கி, மேலெழும்​பியதன் மூலம் இங்கு கடல் விமான போக்​கு​வரத்து சாத்​தி​ய​மாகும் எனத் தெரி​கிறது.

இது குறித்து ஸ்கைஹாப் ஏவி​யேஷன் நிறு​வனத்​தின் நிறு​வனர் அவானி சிங் கூறிய​தாவது: ஸ்கைஹாப் நிறு​வனத்​தின் கடல் விமானம் ரிஷிகேஷில் உள்ள கங்கை தடுப்​பணை​யில் தனது பரிசோதனையை வெற்​றிகர​மாக முடித்​துள்​ளது.

விமான போக்குவரத்​துக்​கான சான்​றிதழ் பெறும் நடவடிக்​கை​யில் நாங்கள் இறங்​கி​யுள்​ளோம். சான்​றிதழ் கிடைத்​தவுடன் வர்த்தக ரீதி​யாக நாங்​கள் கடல் விமான போக்​கு​வரத்தை தொடங்​கு​வோம்.

லட்சத் ​தீவு பகு​தியிலும் ஸ்கைஹாப் நிறு​வனம் கடல் விமான போக்​கு​வரத்தை தொடங்க திட்ட​மிட்​டுள்​ளது. இங்கு ஐந்து தீவுகளை இணைக்​கும் வகை​யில் 19 இருக்​கைகள் கொண்ட கடல் வி​மானத்தை முதல் கட்​ட​மாக இயக்க திட்​ட​மிட்​டுள்​ளோம்​. இவ்வாறு அவர்​ கூறி​னார்​.

SCROLL FOR NEXT