இந்தியா

உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7% ஆக தொடரும்: நிர்மலா சீதாராமன் நம்பிக்கை

செய்திப்பிரிவு

சிகாகோ: உல​களா​விய சவால்​களுக்கு மத்​தி​யிலும் இந்​தி​யா​வின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீத​மாகத் தொடரும் என்று நிர்மலா சீதாராமன் தெரி​வித்​துள்​ளார்.

அமெரிக்​கா​வின் சிகாகோ நகரில் நடை​பெற்ற இந்​திய வம்சாவளி​யினருட​னான சந்​திப்​பில் கலந்​து​கொண்ட மத்​திய நிதியமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் பேசி​ய​தாவது: உக்​ரைன்​-ரஷ்யா மற்​றும் மத்​திய கிழக்கு நாடு​களிடையே​யான போர், வரி விதிப்​புப் பிரச்​சினை​கள் மற்​றும் ஹார்​முஸ் ஜலசந்தி வழியி​லான எரிபொருள் மற்​றும் உரம் விநி​யோகத் தடைகள் போன்ற உலகளா​விய சவால்​கள் காணப்​படு​கின்​றன.

ஆனால், இதற்கு மத்​தி​யிலும் இந்​தி​யப் பொருளா​தா​ரம் சீரான வளர்ச்​சி​யைக் கண்டு வரு​கிறது. கரோனா பெருந்​தொற்​றுக்​குப் பிறகும் இந்​தி​யப் பொருளா​தா​ரம் தொடர்ச்​சி​யாக 7 சதவீதம் அல்லது அதற்கு மேல் வளர்ச்சி அடைந்து வரு​கிறது. இந்த வளர்ச்சி வேகம் தொடர்ந்து பராமரிக்​கப்​படும். சர்​வ​தேச சந்தையில் ஒரு மூட்டை யூரி​யா​வின் கொள்​முதல் விலை ரூ.3,000 ஆக உள்ள நிலை​யில், மத்​திய அரசு ரூ.2,700 மானி​யம் வழங்​கி, விவ​சா​யிகளுக்கு வெறும் ரூ.300 என்ற விலை​யில் வழங்கி வருகிறது.

பன்​முக சர்​வ​தேச அமைப்​பு​களின் செயல்​பாடு​கள் மந்​த​மாக உள்ள​தால், பல்​வேறு நாடு​களு​டன் நேரடி இருதரப்பு வர்த்​தகம் மற்றும் முதலீட்டு ஒப்​பந்​தங்​களை இந்​தியா மேற்​கொண்டு வருகிறது. 2030-ம் ஆண்​டுக்​குள் நாட்​டின் கடன் அ ளவை மொத்த உள்​நாட்டு உற்​பத்​தி​யில் 50 சதவீதத்​துக்​குக் கீழ் கொண்​டுவர இலக்கு நிர்ணயித்து செயல்​பட்டு வரு​கிறோம். இவ்​வாறு நிதியமைச்​சர்​ பேசினார்.

SCROLL FOR NEXT