இந்தியா

இந்தியா - தாய்லாந்து கூட்டு ராணுவப் பயிற்சி இன்று தொடக்கம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியா மற்​றும் தாய்லாந்து ராணுவத்​தினர் இணைந்து மேற்​கொள்​ளும் 15-ஆவது ‘மைத்​ரீ’ கூட்டு ராணுவப் பயிற்சி தாய்லாந்தில் இன்று (ஆகஸ்ட் 18) தொடங்கி வரும் 31-ம் தேதி வரை நடை​பெறுகிறது.

இந்​தப் பயிற்​சி​யில் பங்​கேற்​ப​தற்​காக 85 வீரர்​களைக் கொண்ட இந்​திய ராணுவத்​தின் படைப்​பிரிவு நேற்று தாய்​லாந்து புறப்பட்டுச் சென்​றது. இந்​திய ராணுவத்​தின் சார்​பில் 9-வது கூர்க்கா ரைபிள்ஸ் படைப்​பிரி​வின் வீரர்​களும், தாய்​லாந்து ராணுவத்​தின் சார்​பில் 3-ஆவது பட்​டா​லியன் வீரர்​களும் இதில் பங்கேற்​கின்​றனர்.

இரு நாடு​களின் படைகளும் தங்​கள் செயல்​பாட்டு அனுபவங்களைப் பகிர்ந்​து​கொள்​வதுடன், நவீன ராணுவ உபகரணங்​கள் மற்​றும் தொழில்​நுட்​பங்​களை​யும் இந்​தக் கூட்​டுப் பயிற்​சி​யின் போது காட்​சிப்​படுத்​தவுள்​ளன. கடந்த 2006-ம் ஆண்டு தொடங்​கப்​பட்ட இந்த ‘மைத்​ரீ’ ராணுவப் பயிற்​சி, இரு நாட்டு ராணுவப் படைகளுக்கு இடையே சிறந்த நடை​முறை​களைப் பகிர்ந்​து​கொள்​ள​வும், பரஸ்பர புரிதலை அதி​கரிக்​க​வும் வழிவகுத்துள்​ளது.

SCROLL FOR NEXT