இந்தியா

உலகளாவிய கப்பல் கட்டும் மையமாக மாறும் திறன் இந்தியாவுக்கு உள்ளது: ராஜ்நாத் சிங்

செய்திப்பிரிவு

கொல்கத்தா: கார்​டன் ரீச் ஷிப் பில்​டர்ஸ் அண்ட் இன்​ஜினியர்ஸ் மற்​றும் யந்​திரா இந்தியா நிறு​வனங்​களின் 5 விரி​வாக்​கத் திட்டங்களுக்கு பாது​காப்புத் துறை அமைச்​சர் ராஜ்நாத் சிங் நேற்று காணொலி மூலம் அடிக்​கல் நாட்​டி​னார். கொல்​கத்​தா​வில் நடை​பெற்ற இவ்​விழா​வில் மேற்கு வங்க முதல்​வர் சுவேந்து அதிகாரி​யும் உடன் இருந்​தார்.

இந்​நிகழ்ச்​சி​யில் அமைச்​சர் ராஜ்​நாத் சிங் பேசி​ய​தாவது: மேற்கு வங்​கத்​தில் ரூ.3,500 கோடி மதிப்​பிலான 5 திட்​டங்​களுக்கு அடிக்கல் நாட்​டப்​பட்​டுள்​ளது. உலகளா​விய கப்​பல் கட்​டும் மையமாக மாறு​வதற்கு இந்​தியா திறன் பெற்​றுள்​ளது. உலகளாவிய கப்​பல் கட்​டும் துறை​யில் ஒரு வெற்​றிடம் ஏற்​பட்டு வரு​கிறது, இந்த வாய்ப்பை இந்​தி​யா​வால் கைப்​பற்ற முடி​யும், மேற்கு வங்​கத்​தில் கடந்த காலங்​களில் தொழிற்​சாலைகள் மூடப்படு​வது மற்​றும் வேலைநிறுத்​தம் பற்​றிய செய்​தி​கள் வந்​தவண்​ணம் இருந்​தன. ஆனால் இங்கு புதிய அரசு அமைந்த பிறகு புதிய திட்​டங்​கள் தொடங்​கப்​படு​கின்​றன. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

SCROLL FOR NEXT