இந்தியா

போர் விமான பைலட் இருக்கையை வெளியேற்றும் சோதனை வெற்றி!

முன்னணி நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்த இந்தியா

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ​​போர் விமான பைலட் இருக்கை வெளி​யேற்​றும் சோதனையை ராணுவ ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்டு மையம் நேற்று முன்​தினம் வெற்​றிகர​மாக மேற்​கொண்​டது.

விமானப்​படை பயன்​பாட்​டுக்​காக இலகு ரக போர் விமானங்​கள் உள்​நாட்​டிலேயே தயாரிக்​கப்​படு​கின்​றன. இவற்​றில் பொருத்தப்படும் பைலட் இருக்​கை, ஆபத்​தான நேரங்​களில் பைலட் தப்​பிக்க உதவு​கிறது.

இதற்​காக இந்த சீட்​டின் அடி​யில் ராக்​கெட் மோட்​டார் பொருத்​தப்​பட்ட இன்​ஜின் இருக்​கும். அவசர காலத்​தில் இதன் சுவிட்சை பைலட் ஆன் செய்​தால், அவர் விமானத்தை விட்டு பல அடி உயரம் இருக்​கை​யுடன் தூக்கி வீசப்படு​வார். பின் பாராசூட் உதவி​யுடன் அவர் தரை​யிறங்​கு​வார்.

உள்​நாட்​டில் தயாரிக்​கப்​பட்ட அதிவேக ராக்​கெட் இன்​ஜின், போர் விமானத்​தின் முன் பகுதி அமைப்​புடன் பொருத்​தப்​பட்​டு, அது சிறப்பு தண்​ட​வாளத்​தில் அதிவேகத்​தில் செல்​லும்போது பைலட் இருக்கை வெளி​யேறும் சோதனை நேற்று முன்​தினம் மேற்​கொள்​ளப்​பட்​டது.

இதற்​காக சண்​டிகரில் பரிசோதனை மையம் அமைக்கப்​பட்​டிருந்​தது. மணிக்கு 800 கி.மீ வேகத்​தில், ராக்​கெட் இன்​ஜின் பொருத்​தப்​பட்ட போர் விமானத்​தின் முன்​பகுதி தண்​ட​வாளத்​தில் செல்​லும் போது பைலட் இருக்கை வெற்​றிகர​மாக வெளியேற்றப்பட்​டது.

ஏரோ​ நாடிக்​கல் மேம்​பாட்டு முகமை மற்றும் இந்​துஸ்​தான் ஏரோ​னாடிக்ஸ் ஆகியவை இணைந்து இந்த பரிசோதனையை நடத்​தி​யது. இதை இந்​திய விமானப்​படை மற்​றும் ஏரோஸ்​பேஸ் மெடிசன் இன்​ஸ்​டிடியூட் அதி​காரி​கள் பார்​வை​யிட்​டனர். இதுபோன்ற சோதனையை வளர்ச்​சி​யடைந்​த ஒரு சில ​நாடு​கள்​ மட்​டுமே மேற்​கொள்​கின்​றன. அந்​தப்​ பட்​டியலில்​ இந்​தி​யா​வும்​ தற்போது இணைந்​துள்​ளது.

SCROLL FOR NEXT