அமெரிக்க வர்த்தக அமைச்சர் லுட்னிக்

 
இந்தியா

அமெரிக்க அமைச்சரின் தகவல் தவறானது: மத்திய அரசு விளக்கம்

செய்திப்பிரிவு

மத்​திய வெளி​யுறவுத் துறை செய்​தித் தொடர்​பாளர் ரந்​தீர்ஜெய்​ஸ்​வால் டெல்​லி​யில் நேற்று கூறிய​தாவது: வர்த்தக ஒப்​பந்​தம் தொடர்​பாக கடந்த ஆண்டு பிப்​ர​வரி 13-ம் தேதி முதல் இந்​தி​யா, அமெரிக்கா இடையே பேச்​சு​வார்த்தை நடை​பெற்று வரு​கிறது. இருதரப்​பும் பல்​வேறு சுற்று பேச்​சு​வார்த்​தைகளை நடத்தி உள்​ளன. இந்த பேச்​சு​வார்த்​தைகளில் ஒப்​பந்​தத்​தின் இறுதி வடிவத்தை எட்​டினோம்.

இருதரப்​புக்​கும் பலன் அளிக்​கும் வர்த்தக ஒப்​பந்​தத்தை ஏற்​படுத்​து​வ​தில் இந்​தியா உறு​தி​யாக உள்​ளது. இந்​திய பிரதமர் நரேந்​திர மோடிக்​கும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​புக்​கும் நெருங்​கிய நட்​புறவு நீடிக்​கிறது. கடந்த 2025-ம் ஆண்​டில் பிரதமர் மோடி​யும், அமெரிக்க அதிபர் ட்ரம்​பும் 8 முறை தொலைபேசி​யில் பேசி உள்​ளனர். அப்​போது பல்​வேறு விவ​காரங்​கள் குறித்து இரு தலை​வர்​களும் ஆலோ​சனை நடத்​தினர். தற்​போது அமெரிக்க வர்த்தக அமைச்​சர் லுட்னிக் கூறி​யிருக்​கும் தகவல் முற்​றி​லும் தவறானது.இவ்​வாறு ரந்​தீர் ஜெய்​ஸ்​வால் தெரி​வித்​தார்​.

SCROLL FOR NEXT