இந்தியா

“மோடி எனது சிறந்த நண்பர்” - ட்ரம்ப் நெகிழ்ச்சி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: அமெரிக்​கா​வின் 250-வது சுதந்​திர தினக் கொண்டாட்​டங்​கள், டெல்​லி​யில் உள்ள அமெரிக்​கத் தூதரகத்​தில் ஞாயிற்​றுக்​கிழமை விமரிசை​யாக நடை​பெற்​றது.

இவ்விழா​வில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வாஷிங்டனிலிருந்து காணொலி வாயி​லாக உரை​யாற்​றி​னார். இது, இரு​நாட்டு உறவில் புதிய மைல்​கல்​லாகப் பார்க்கப்படுகிறது. அதிபர் டிரம்ப் பேசி​ய​தாவது: எனக்கு இந்தியாவை மிக​வும் பிடிக்​கும். நமது நாட்​டின் பிர​தி​நி​தி​யாகப் பங்கேற்றுள்ள தூதர் செர்​ஜியோ கோர் இங்கு ஒரு சிறந்த உரையை ஆற்ற வேண்​டும் என விரும்​பு​கிறேன். அங்கு கூடியிருக்கும் அனை​வருக்​கும் எனது அன்​பான வணக்​கங்​கள். இந்​தி​யப் பிரதமர் நரேந்​திர மோடியை எனக்கு மிக​வும் பிடிக்​கும்; அவர் ஒரு சிறந்த தலை​வர், எனது மிக நெருங்​கிய நண்​பர்.

இந்​தியா என்னை 100 சதவீதம் நம்​பலாம். எங்​களின் அமெரிக்​கப் பொருளா​தா​ரம் மற்​றும் பங்​குச்​சந்தை தற்​போது புதிய உச்சங்களைத் தொட்டு வரலாற்​றுச் சாதனை படைத்து வரு​கிறது. பிரதமர் மோடி​யின் மிகப்​பெரிய ரசிகன் நான். மார்கோ ரூபியோமிகச் சிறந்​தவர். அமெரிக்க வரலாற்​றிலேயே மிகச் சிறந்த வெளி​யுறவு அமைச்​ச​ராக அவர் வலம் வரு​கிறார். இவ்வாறு ட்ரம்ப் பேசி​னார்.

அமெரிக்​கத் தூதரகத்​தில் நடை​பெற்ற இந்த விழா​வில் அமெரிக்கத் தூதர் செர்​ஜியோ கோர், அமெரிக்க வெளி​யுறவு அமைச்​சர் மார்கோ ரூபியோ ஆகியோ​ருடன், மத்​திய வெளியுறவுத் துறை அமைச்​சர் எஸ். ஜெய்​சங்​கரும் சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்​றார். அமெரிக்க தூதர் செர்​ஜியோ கோர் கூறுகை​யில், “இந்​தியா மற்​றும் அமெரிக்கா இடையே நீண்ட நாட்களாகப் பேச்​சு​வார்த்​தை​யில் இருக்​கும் இடைக்​கால வர்த்தக ஒப்​பந்​தம் இறு​திக்​கட்ட வடிவத்தை எட்​டி​யுள்​ளது. நான் இந்தியாவுக்​கான தூத​ராகப் பொறுப்​பேற்று வந்த ஐந்து மாதங்களி​லேயே, இந்த வர்த்தக ஒப்​பந்​தத்​திற்​கான வரைவு அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இன்​னும் சில வாரங்​களில் இந்த வரலாற்றுச் சிறப்​புமிக்க ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும் என நம்புகிறேன்​’’ என்​றார்​.

SCROLL FOR NEXT