இந்தியா

பெங்களூருவில் ஜனவரி 10-ம் தேதி இளையராஜா கச்சேரி

செய்திப்பிரிவு

பெங்களூரு: இசைத்​துறைக்கு வந்து 50 ஆண்​டு​கள் நிறைவு பெறுவதையொட்டி பெங்​களூருவில் வரும் ஜனவரி 10-ம் தேதி இசை நிகழ்ச்​சியை இசையமைப்​பாளர் இளை​ய​ராஜா நடத்​த உள்​ளார்.

கர்நாடகாவில் உள்ள 23 லட்சம் பள்ளி குழந்தைகளுக்கு தினமும் மதிய உணவு வழங்கும் அக்சய பாத்ரா பவுண்​டேஷனின் வெள்ளி விழாவையொட்டி இந்த நிகழ்ச்​சிக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.

அக்சய பாத்ரா பவுண்​டேஷனின் வளர்ச்சி நிதிக்​காக இந்த இசைநிகழ்ச்சி நடத்​தப்​பட உள்ளதாக இளையராஜா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT