இந்தியா

வங்கதேச வன்முறையில் கபட நாடகம்: சினிமா பிரபலங்கள் ஜான்வி கபூர், காஜல் அகர்வால் கருத்து

செய்திப்பிரிவு

மும்பை: காசா பற்றி கவலைப்​படு​பவர்​கள், வங்​கதேசத்​தில் சிறு​பான்​மை​யினருக்கு ஏற்​படும் கொடுமை​கள் குறித்து கண்​டு​கொள்​ளாமல் இருப்​பது கபட​நாடகம் என சினிமா பிரபலங்​கள் கருத்து தெரி​வித்​துள்​ளனர்.

வங்​கதேசத்​தில் கடந்த வாரம் நடை​பெற்ற வன்​முறை​யில் திபு சந்​திர​தாஸ் (30) என்ற இந்து தொழிலாளி அடித்​துக் கொல்​லப்​பட்டு எரிக்​கப்​பட்​டார்.

இது குறித்து சமூக ஊடகத்​தில் கருத்து தெரி​வித்​துள்ள பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கூறிய​தாவது: வங்​கதேசத்​தில் நடை​பெறும் வன்​முறை காட்​டுமி​ராண்​டித்​தன​மானது. இது படு​கொலை. திபு சந்​திர​தாஸ் அடித்​துக் கொல்​லப்​பட்ட சம்​பவத்தை அறி​யாதவர்​கள், அந்த செய்தி பற்றி படி​யுங்​கள். வீடியோக்​களை பார்த்து கேள்வி எழுப்​புங்​கள். இச்​சம்​பவம் நமக்கு கோபத்தை எழுப்​ப​வில்லை என்​றால் அது கபட நாடகம்​தான். நமது சொந்த சகோ​தர, சகோ​தரி​கள் எரித்​துக் கொல்​லப்​படும்​போது, நாம் உலகள​வில் நடை​பெறும் வன்​முறை​கள் பற்றி தொடர்ந்து கூக்​குரலிடு​கிறோம். மத தீவிர​வாதத்​தில் அப்​பாவி​கள் பலி​யாகிறார்​கள். இதற்கு நாம் கண்​டனம் தெரிவிக்க வேண்​டும். இவ்​வாறு அவர் கூறினார்.

நடிகை காஜல் அகர்​வால் விடுத்​துள்ள செய்​தி​யில், ‘‘ வங்​கதேசத்​தில் மத தீவிர​வாதத்​தால் அச்​சத்​தில் வாழும் இந்து சிறு​பான்​மை​யினருக்கு துணை நிற்க வேண்​டும்’’ என குறிப்​பிட்​டுள்​ளார்.

நடிகை மற்​றும் முன்​னாள் எம்​.பி.​ ஜெயப் பிரதா விடுத்​துள்ள செய்​தி​யில், ‘‘வங்​கதேசத்​தில் அப்​பாவி திபு சந்​திர​தாஸ் கொடூர​மாக அடித்​துக் கொல்​லப்​பட்டு எரிக்​கப்​பட்ட சம்​பவம் மிகுந்த மனவேதனையை அளிக்​கிறது. இது சாதாரண வன்​முறை அல்ல. கொடூர படு​கொலை. இது இந்து மதத்​தின் மீதான தாக்​குதல். நமது கோயில்கள் அழிக்​கப்​படு​கின்​றன. பெண்கள் தாக்​கப்​படு​கின்​றனர். எவ்​வளவு காலம் நாம் அமை​தி​யாக இருக்க முடி​யும்? நாம் வங்​கசேத சிறு​பான்​மை​யினருக்​காக குரல் எழுப்பி உதவ வேண்​டும். இந்த கொடூர சம்​பவத்​துக்கு நாம் நீதி கோர வேண்​டும்​’’ என தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT