இந்தியா

வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மீது மக்களவையில் ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்​களவை​யில் நேற்று வினாத்​தாள் கசிவு தடுப்பு மசோதா மீது கார​சா​ர​மாக விவாதம் நடை​பெற்​றது.

நீட் வினாத்​தாள் கசிவு பிரச்​சினைக்கு தீர்வு காண புதிய மசோதா நிறைவேற்​றப்​படும் என்று பிரதமர் நரேந்​திர மோடி உறுதி அளித்தார். இதன்​படி மக்​களவை​யில் நேற்று முன்​தினம் பொதுத்தேர்வு (முறை​கேடு​களை தடுத்​தல்) திருத்த மசோதா 2026ஐ மத்​திய அமைச்​சர் ஜிதேந்​திர சிங் தாக்​கல் செய்​தார். எதிர்க்​கட்​சிகளின் அமளி​யில் மசோதா மீது விவாதம் நடத்தப்படவில்​லை.

இதைத் தொடர்ந்து நேற்று காலை 11 மணிக்கு மக்​களவை கூடியது. நாடாளு​மன்ற பேரணி​யின்​போது மாணவர்​கள் மீது தடியடி நடத்​தப்​பட்​டதை கண்​டித்து எதிர்க்​கட்சி எம்​பிக்​கள் அமளியில் ஈடு​பட்​டனர். இதனால் பிற்​பகல் 2 மணி வரை அவை ஒத்​திவைக்​கப்​பட்​டது. மீண்​டும் அவை கூடிய​போது மசோதா மீதான விவாதம் தொடங்​கியது.

அப்​போது அமைச்​சர் ஜிதேந்​திர சிங் கூறிய​தாவது: காங்​கிரஸ் தலை​மையி​லான ஐக்​கிய முற்​போக்கு கூட்​டணி அரசில் பலமுறை வினாத்​தாள்​கள் கசிந்​துள்​ளன. 2009-ல் ரயில்வே வாரிய தேர்​வு, 2011-ல் அகில இந்​திய பொறி​யியல் நுழைவுத் தேர்​வு, 2012-ல் டெல்லி எய்ம்ஸ் நுழைவுத் தேர்வு வினாத்​தாள்​கள் கசிந்​துள்ளன. அப்போது தேசிய அளவி​லான தேர்வு ஆணை​யத்தை அமைக்க பரிந்​துரை முன்​வைக்​கப்​பட்​டது. இதன்​ தொடர்ச்​சி​யாக கடந்த 2017-ல் தேசிய தேர்வு முகமை உரு​வாக்​கப்​பட்​டது. இவ்​வாறு அவர் பேசி​னார்.

அகிலேஷ் யாதவ் பேசும் போது, “ஒரு பிரதானை நீக்கிவிட்டு, பிரதமரை காப்பாற்றி விட்டீர்கள்” என்றார்.

பிரி​யங்கா காந்தி விமர்​சனம்:

காங்​கிரஸ் எம்பி பிரி​யங்கா காந்தி பேசி​ய​தாவது: “நீட் வினாத்​தாள் கசிவுக்கு எதி​ராக போராடிய மாணவர்​கள் மீது தடியடி நடத்தி கண்​ணீர் புகைக்குண்​டு​களை வீசி​யது ஏன் ? ஏகே 47 துப்​பாக்​கியை பயன்படுத்தியது ஏன்?

கர்ப்​பிணியை பாலியல் வன்​கொடுமை செய்த நபர்​களின் விடு​தலையை பிரகலாத் ஜோஷி வரவேற்​றார். தற்​போது மத்​திய கல்வி அமைச்​ச​ராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்​ மூலம் கோடிக்​கணக்​கான மாணவிகளுக்கு மத்​திய அரசு என்ன சொல்ல விரும்​பு​கிறது ? புதிதாக தாக்​கல் செய்​யப்​பட்ட மசோ​தா​வில் வினாத்​தாள் கசிவை தடுப்​ப​தற்​கான அம்​சங்​கள் இல்​லை.

நீட் வினாத்தாள் கசிவுக்கு பிரதமர் நரேந்திர மோடியே பொறுப்பேற்க வேண்டும். வி​னாத்​தாள் கசிவை தடுப்​ப​தற்​கான பரிந்​துரைகளை அளிக்க மத்​திய அரசு சார்​பில் உயர்​நிலைக் குழு நியமிக்​கப்​பட்டு உள்​ளது. இந்த குழு​வில் கோமி​யம் நிபுணர் (சென்னை ஐஐடி இயக்​குநர் காமகோடி), ஐடி நிறுவன உரிமையாளர் (நந்​தன் நில​கேனி), உளவுத் துறை முன்​னாள் இயக்குநர் (தபன் டேகா) ஆகியோர் நியமிக்​கப்​பட்டு உள்​ளனர். இது வேடிக்​கை​யாக இருக்​கிறது” இவ்​வாறு அவர் பேசி​னார்.

கடந்த 2025-ம் ஆண்டு சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசும்போது, “எனது தந்தை காய்ச்சலில் இருந்தபோது சன்னியாசி ஒருவர் வந்தார். கோமியம் குடிக்கச் சொன்னார். எனது தந்தை கோமியம் குடித்ததும் 15 நிமிடங்களில் காய்ச்சல் குணமாகிவிட்டது. கோமியத்தில் கிருமி நாசினிகள், ஜீரண மண்டலத்துக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் உள்ளன” என்று தெரிவித்தார். இதை மறைமுகமாக சுட்டிக்காட்டி சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடியை, கோமியம் நிபுணர் என்று பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

மத்​திய கல்வி அமைச்​சர் பிரகலாத் ஜோஷி தொடர்​பான பிரியங்காவின் கருத்​துக்கு மத்​திய அமைச்​சர் கிரண் ரிஜிஜு கடும் கண்​டனம் தெரி​வித்​தார். “ஜோஷி மீதான குற்​றச்​சாட்​டுக்கு ஆதா​ரங்​களை அளிக்க வேண்​டும். இல்​லை​யென்​றால் அவை​யில் பகிரங்​க​மாக மன்​னிப்பு கோர வேண்​டும்” என்று வலியுறுத்தினார். இந்த விவ​காரத்​தால் ஆளும் கட்​சி, எதிர்க்​கட்சி எம்.​பிக்கள் இடையே கார​சா​ர​மான கருத்து மோதல்​கள் ஏற்பட்டன. இந்த மசோதா தொடர்பான விவாதம் நேற்று இரவு வரை நீடித்தது.

SCROLL FOR NEXT