இந்தியா

கர்நாடகாவில் ‘வெறுப்பு பேச்சு’க்கு எதிரான மசோதா நிறைவேற்றம்: பாஜக கடும் எதிர்ப்பு ஏன்?

7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதாவின் அம்சங்கள்

இரா.வினோத்

பெங்களூரு: கர்​நாடக சட்​டப்பேர​வை​யில் பாஜக எம்​எல்​ஏக்​களின் எதிர்ப்​புக்கு மத்​தி​யில் வெறுப்பு பேச்சு தடுப்பு மசோதா நிறைவேற்​றப்​பட்​டுள்​ளது. இதன் மூலம் குற்​ற​வாளி​களை 7 ஆண்டு​கள் வரை சிறை​யில் அடைக்க வழி​வகை செய்யப்பட்டுள்ளது.

கர்​நாடக மாநிலத்​தில் உடுப்​பி, மங்​களூரு, கார்​வார் உள்​ளிட்ட கடலோர மாவட்​டங்​களில் மதம், மொழி, சாதி உள்​ளிட்​ட​வற்​றின் அடிப்​படை​யில் வெறுப்பு பேச்சு காரண​மாக அவ்​வப்​போது கலவரங்​கள் நிகழ்ந்​தன. இதனால் கர்​நாடக அரசு வெறுப்பு பேச்சுக்கு எதி​ரான சட்​டத்தை கொண்​டுவர முடி​வெடுத்​தது. அதன்​படி வெறுப்பு பேச்சு மற்​றும் வெறுப்பு குற்​றங்​கள் தடுப்பு மசோ​தாவுக்கு கடந்த 4-ம் தேதி அமைச்​சர​வைக் கூட்​டத்​தில் ஒப்புதல் அளிக்​கப்​பட்​டது.

இந்த மசோ​தாவை உள்​துறை அமைச்​சர் பரமேஷ்வரா கடந்த 10-ம் தேதி சட்​டப்​பேர​வை​யில் தாக்​கல் செய்​தார். அதற்கு எதிர்க்கட்சி தலை​வர் ஆர்​.அசோகா உள்​ளிட்ட பாஜக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​தனர். இந்த சட்​டத்​தின் மூலம் காங்​கிரஸ் அரசு பாஜக​வினரை​யும் இந்​துத்​துவ அமைப்பினரை​யும் ஒடுக்க திட்​ட​மிட்​டுள்​ள​தாக குற்றம்சாட்டினார்.

சட்​டப்​பேர​வை​யில் இந்த மசோதா குரல் வாக்​கெடுப்​பின்​போது நிறைவேற்​றப்​பட்​டது. அப்​போது பாஜக எம்​எல்​ஏக்​கள் அவை​யின் மைய பகு​திக்கு வந்​து, எதிர்ப்பு தெரி​வித்​தனர். அதை​யும் மீறி இந்த மசோதா வெற்​றிகர​மான நிறைவேற்​றப்​பட்​ட​தாக பேரவைத்தலை​வர் யு.டி.​காதர் அறி​வித்​தார்.

மசோ​தா​வின் அம்​சங்​கள் இந்த மசோ​தா​வின்​படி மதம், சாதி, மொழி, இனம், பாலினம், பிறப்​பிடம் ஆகிய​வற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு​வருக்கு எதி​ராக செய்​யப்​படும் வெறுப்​புரை, ச‌மூக ஒற்​றுமைக்கு குந்​தகம் ஏற்​படுத்​தி​னால் தண்டனைக்​குரிய குற்​ற​மாக கருதப்​படும்.

வெறுப்பு பேச்​சாக மட்டுமல்​லாமல் சமூக வலை​தளங்​கள் மூலம் தகவல், படம், வீடியோ, கணினி மென்​பொருள், மைக்ரோ ஃபிலிம் போன்ற வடிவங்​களில் இடம்​பெற்​றாலும் வெறுப்​புச் செயல்​களாகக் கருதப்படும்.

இத்​தகைய குற்​றத்தை செய்​தால், 1 முதல் 7 ஆண்​டு​கள் வரை சிறை தண்​டனை வழங்​கப்​படும். அதே குற்​றத்தை மீண்​டும் செய்தால் 2 முதல் 10 ஆண்​டு​கள் வரை சிறை மற்​றும் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்​சம் வரை அபராதம் வி​திக்​கப்​படும். இத்தகைய குற்​றங்​கள் ஜாமினில் வெளிவர முடியாத குற்றங்களாக கருதப்​படும்​ என அரசு அறி​வித்​துள்​ளது.

SCROLL FOR NEXT