விதி கல்​பேஷ் மேகா

 
இந்தியா

மகள் உடலை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும்: கனடா அரசுக்கு குஜராத்தில் உள்ள தந்தை கோரிக்கை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ​போதை கடத்​தல் ஆசாமி​யால் கொல்​லப்​பட்ட மகள் உடலை, இந்​தி​யா​வுக்கு அனுப்பி வைக்க வேண்​டும் என்று குஜ​ராத்​தில் உள்ள தந்தை கனடா அரசுக்​குக் கோரிக்கை வைத்​துள்​ளார்.

குஜ​ராத் மாநிலம் ஆனந்த் மாவட்​டத்​தில் உள்ள போர்​சாத் பகு​தி​யைச் சேர்ந்​தவர் விதி கல்​பேஷ் மேகா, வயது 22. கடந்த 4 ஆண்​டு​களாக கனடா​வில் வசித்து வந்​தார். இந்​நிலை​யில், கடந்த 15-ம் தேதி போதை கடத்​தல் கும்​பலைச் சேர்ந்த ஆசாமி, மேகாவைக் கத்​தி​யால் குத்​திக் கொலை செய்​தார்.

இதுகுறித்து மேகா​வின் தந்தை நேற்று கூறிய​தாவது: கனடா​வின் நியாகரா பிராந்​தி​யத்​தின் செயின்ட் கேத்​ரீன்ஸ் பகு​தி​யில் என் மகள் மேகாவை கடந்த 15-ம் தேதி, கடத்​தல் கும்​பல் ஆசாமி கொலை செய்​துள்​ளார். ஆனால், 10 நாட்​கள் கழித்​து​தான் எனக்கு தகவல் அனுப்​பி​னார்​கள். பணம் கேட்டு மிரட்​டிய போது என் மகள் தர மறுத்​திருக்​கிறார். அதில் ஆத்​திரம் அடைந்த அந்த ஆசாமி, மகளை அடித்து கத்​தி​யால் குத்தி கொலை செய்​துள்​ளார்.

என் மகளுக்கு இறு​திச் சடங்கு செய்ய வேண்​டும். எனவே, அவருடைய உடலை இந்​தி​யா​வுக்கு விரைந்து அனுப்பி வைக்க கனடா அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும். இதுகுறித்து போர்​சாத் பாஜக எம்​எல்ஏ ராமன்​பாய் சோலங்கி என்​னைத் தொடர்பு கொண்டு பேசி​னார். என் மகள் உடலை கனடா​வில் இருந்து இந்​தி​யா​வுக்கு அனுப்பி வைப்​பது தொடர்​பாக குஜ​ராத் முதல்​வர் அலு​வல​கத்​தி​லும், பிரதமர் அலு​வல​கத்​தி​லும் பேசி​யிருக்​கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

மேகாவைக் கொலை செய்த போதை ஆசாமி ஜோசுவா (40) என்​பவரைப் போலீ​ஸார் கடந்த 18-ம்​ தேதி கைது செய்​து வி​சா​ரித்​து வருகின்​றனர்​.

SCROLL FOR NEXT