இந்தியா

ஆந்திராவில் ரூ.1.35 லட்சம் கோடி முதலீடு: கூகுள் ஏஐ டேட்டா மையத்துக்கு அடிக்கல்

1.88 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்

என்.மகேஷ்குமார்

விசாகப்பட்டினம்: ஆந்​திர மாநிலம் விசாகப்​பட்​டினத்​தில் 3 இடங்​களில் ரூ.1.35 லட்​சம் கோடி முதலீட்​டில் கூகுள் ஏஐ டேட்டா மையம் அமைப்​ப​தற்​கான அடிக்​கல் நாட்டு விழா நேற்று நடை​பெற்​றது. இதில், மத்​திய அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவுடன் இணைந்து ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு அடிக்​கல் நாட்​டி​னார். இதன் மூலம் 1.88 லட்​சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்​கும்.

ஆந்​திர மாநிலம் விசாகப்​பட்​டினம் தர்​ல​வாடா பகு​தி​யில் நேற்று கூகுள் ஏஐ டேட்டா மையத்​துக்​கான அடிக்​கல் நாட்டு விழா விமரிசை​யாக நடந்​தது. விழா​வில் சிறப்பு விருந்​தின​ராக கலந்து கொண்ட மத்​திய அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் மற்​றும் முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு ஆகியோர் அடிக்​கல் நாட்​டினர்.

ரூ.1.35 லட்​சம் கோடி முதலீட்​டில் அமைய உள்ள கூகுள் ஏஐ டேட்டா மையம் மூலம் 1.88 லட்​சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்​ளது. ஒரு கிகா​வாட்​டுக்கு மேல் திறன் கொண்ட இந்த ஏஐ மையம், விசாகப்​பட்​டினத்​தில் 2028-ம் ஆண்​டுக்​குள் அமைக்​கப்​படும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

முதலில், தர்​ல​வா​டா​வில் 266.6 ஏக்​கரிலும், பின்​னர் அடவிவரம் பகு​தி​யில் 160 ஏக்​கரிலும், அனகாபல்லி மாவட்​டம் ராம்​பில்லி அருகே 174.80 ஏக்​கரிலும் இந்த டேட்டா மையங்​கள் அமைக்​கப்பட உள்​ளன. இந்த மையம் கட்​டப்​படும்​போதே சிவில், எலக்ட்​ரி​க்கல் மற்​றும் மெக்​கானிக்கல் பிரிவு​களில் தேர்ச்சி பெற்ற சுமார் 60 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்​ளது.

கேம் சேஞ்​சர்: விசாகப்​பட்​டினத்​துக்​குக் கூகுள் ஏஐ டேட்டா மையம் வரவு என்​பது ஒரு கேம் சேஞ்​சர் என ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு தெரி​வித்​தார். அவர் மேலும் பேசி​ய​தாவது: விசாகப்​பட்​டினத்​துக்கு மட்​டுமல்ல, ஆந்​தி​ரா​வுக்கே இந்த நிகழ்வு ஒரு கேம் சேஞ்​சர்தான்.

ஆந்​திர வரலாற்​றில் இந்த நாள் மறக்க முடி​யாத நாளாகும். இதனால் நான் மத்​திய அரசுக்​கும், கூகுள் நிறு​வனத்​துக்​கும் மனதார நன்​றியைத் தெரி​வித்​துக் கொள்​கிறேன். கூகுள் ஏஐ டேட்டா மையம் மூலம் நம் நாட்​டின் தகவல் தொழில்​நுட்​பத்​தில் ஒரு புதிய அத்​தி​யா​யம் தொடங்கி உள்​ளது.

தொழில்​நுட்ப வளர்ச்​சி​யில் ஆந்​தி​ரா​வின் பங்கு மிக முக்​கிய​மாக மாற உள்​ளது. சர்​வ​தேச டேட்டா நுழைவு வாயி​லாக ஆந்​திரா இருக்​கும். மேலும் பல்​வேறு பிரபல நிறு​வனங்​கள் ஆந்​தி​ரா​வுக்கு வர உள்​ளன. இந்த மையம் 2028 நவம்​பர் மாத இறு​திக்​குள் அமைக்​கப்​படும். வரும் ஜூலை மாதத்​தில் போகாபுரம் விமான நிலை​யத் திறப்பு விழா நடை​பெற உள்​ளது. நாங்​கள் நிறு​வனங்​களு​டன் வெறும் ஒப்​பந்​தங்​கள் மட்​டுமே செய்​வ​தில்​லை. அதை முனைப்​புடன் அடுத்த கட்​டத்​துக்கு கொண்டு செல்​வ​தில் குறி​யாக உள்​ளோம். இதனால்​தான் பல நிறு​வனங்​கள் ஆந்​தி​ரா​வில் முதலீடு செய்ய முன்​வரு​கின்​றன. இவ்​வாறு சந்​திர​பாபு நாயுடு பேசி​னார்.

ஏஐ பட்​டினம்: மத்​திய அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் கூறிய​தாவது: நாடே பெரு​மிதம் அடை​யும் விதத்​தில் தொலைநோக்கு பார்வை கொண்ட தலை​வர் சந்​திர​பாபு நாயுடு. ஒருங்​கிணைந்த ஆந்​திர மாநிலத்​தில் ஹைத​ரா​பாத்​தில் ஒரு சைப​ரா​பாத் நகரை உரு​வாக்கி அதை தகவல் தொழில்​நுட்பத் தலைநகர​மாக மாற்றி சாதனை படைத்​தவர் சந்​திர​பாபு நாயுடு.

தற்​போது விசாகப்​பட்​டினம் வருங்​காலத்​தில் ஏஐ பட்​டின​மாக மாறும் வித​மாக கூகுள் ஏஐ டேட்டா மையத்தை இங்கு கொண்டு வந்​துள்​ளார். பிரதமர் மோடி, முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு ஆகிய இரு​வரும் தொலைநோக்குப் பார்​வை​யுடன் நாட்டை முன்​னோக்கி கொண்டு செல்​பவர்​கள். இளைய சமூகத்​துக்கு எடுத்​துக்​காட்​டாக விளங்கி வருபவர் அமைச்​சர் லோகேஷ். இவருடைய தீவிர முயற்​சிகளால் பணி​கள் விரை​வாக நடை​பெறுகின்​றன.

எலக்ட்​ரானிக்ஸ் தயாரிப்​பில் இந்​தியா சிறந்து விளங்​கு​கிறது. செமி கண்​டக்​டர் தயாரிப்​பில் நம் நாடு முக்​கிய இடம் வகிக்​கிறது. ஒரு டாலர் மதிப்​புள்ள ‘சிப்’ கிடைக்​கா​விடில், மில்​லியன் டாலர் பொருட்​களின் உற்​பத்தி நின்று போய் விடும். ரயில்வே துறை மூலம் ஆந்​தி​ரா​வுக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. ஒரு லட்​சம் கோடி மதிப்​புள்ள ரயில்வே பணி​கள் ஆந்​தி​ரா​வில் நடை​பெற்று வரு​கின்​றன. ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் ஆந்​தி​ரா​வில் ‘தென் கடலோர ரயில்வே வட்​டம்’ தொடங்​கப்பட உள்​ளது. விரை​வில் புல்​லட் ரயில்​கள் தென் இந்​திய மாநிலங்​களில் பறக்க உள்​ளன.

இதனால், சென்​னை, அமராவ​தி, ஹைத​ரா​பாத், பெங்​களூரு நகரங்​கள் பயனடைய உள்​ளன. அமராவ​தி​யில் இருந்து ஹைத​ரா​பாத்​துக்கு வெறும் 70 நிமிடங்​களில்​ சென்​றடைந்​து விடலாம்​. இவ்​​வாறு அஸ்​வினி வைஷ்ணவ்​ கூறி​னார்​. ​நிகழ்​ச்​சி​யில்​ மத்​திய அமைச்​சர்​ ​ராம்​மோகன்​ ​நா​யுடு, ​மாநில அமைச்​சர்​ லோகேஷ், கூகுள்​ நிறு​வன பிர​தி​நி​தி​கள்​ உட்​பட மேலும்​ பல உயர்​ அ​தி​காரிகள்​ பங்​கேற்​றனர்​.

SCROLL FOR NEXT