அமராவதி: பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் சீக்கியர்களின் பொற்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தினமும் சுமார் 1 லட்சம் பேர் தரிசனம் செய்கின்றனர்.
இங்கு மத நம்பிக்கை கடுமையாக பின்பற்றப்படுகிறது. இந்நிலையில், பொற்கோயிலில் அமலில் உள்ள சட்டதிட்டங்களை அறிந்து வந்து அறிக்கை தர ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒரு குழு அமைத்து உத்தரவிட்டார்.
அந்த அறிக்கையின் அடிப்படையில் திருமலையிலும் இந்துக்கள் அல்லாதவர்கள் ஏழுமலையானை தரிசிக்க புதிய சட்டதிட்டங்கள் தீவிரமாக அமல் படுத்தப்பட உள்ளன.