புதுடெல்லி: என்சிஇஆர்டி 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், அண்மை தீர்ப்புகள் குடிசைவாழ் மக்களை ஆக்கிரமிப்பாளர்களாக பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் என்சிஆர்டியின் முன்னாள் பேராசிரியர் பங்கஜ் புஷ்கர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நீதித்துறை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து விவரிக்கப்பட்டதால், என்சிஇஆர்டி 8-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில் அதே பாடப்புத்தகத்தில், நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்புகள் குடிசைவாழ் மக்களை ஆக்கிரமிப்பாளர்களாக பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளது என என்சிஆர்டியின் முன்னாள் பேராசிரியர் பங்கஜ் புஷ்கர் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது மாணவர்களுக்கு நீதித்துறை குறித்து தவறான புரிதலை ஏற்படுத்தும். இப்புத்தகத்தை மறுஆய்வு செய்து உரிய திருத்தம் செய்யவும், எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் பங்கஜ் புஷ்கர் கூறியுள்ளார்.