நரேஷ் குஜ்​ரால்

 
இந்தியா

​வாட்ஸ்அப் கணக்கை ஹேக் செய்து முன்​னாள் பிரதமர் மகனிடம் ரூ.7.68 கோடி மோசடி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: வாட்ஸ் அப் கணக்கை ஹேக் செய்து முன்​னாள் பிரதமர் ஐ.கே.குஜ்​ராலின் மகன் நரேஷ் குஜ​ராலிடம் ரூ.7.68 கோடி மோசடி செய்​யப்​பட்டு உள்​ளது.

கடந்த 1997 முதல் 1998-ம் ஆண்டு வரை நாட்​டின் 12-வது பிரதமராக ஐ.கே.குஜ்​ரால் பதவி வகித்​தார். இவரது மூத்த மகன் நரேஷ் குஜ்​ரால். கடந்த 2007 முதல் 2022-ம் ஆண்டு வரை சிரோமணி அகாலி தளம் கட்​சி​யின் மாநிலங்​களவை எம்.​பி.​யாக பதவி வகித்​தார். தற்​போது டெல்​லி​யில் ஜவுளி, தோல் பொருட்​கள் உற்​பத்தி நிறு​வனங்​களை நடத்தி வரு​கிறார். இந்நிலையில், அவரது வாட்ஸ் அப் கணக்கை ஒரு கும்​பல் அண்​மை​யில் ஹேக் செய்​துள்​ளது.

பின்​னர் அவரது வாட்ஸ் அப்​பில் இருந்து நிறு​வனத்​தின் தலைமை நிதி அதி​காரி சுபம் சிங்​குக்கு கடந்த 12-ம் தேதி குறுஞ்​செய்தி அனுப்​பப்​பட்டு உள்​ளது. அதில் குறிப்​பிட்ட வங்​கிக் கணக்​குக்கு ரூ.7.68 கோடியை ஆர்​டிஜிஎஸ் மூலம் அனுப்​பு​மாறு உத்தரவிடப்பட்டு இருந்​தது. உடனடி​யாக தலைமை நிதி அதி​காரி சுபம் சிங், நிறு​வனத்​தின் வங்​கிக் கணக்​கில் இருந்து குறிப்​பிட்ட வங்​கிக் கணக்​குக்கு ரூ.7.68 கோடியை அனுப்​பி​னார்.

அதன்பின்னர்தான் ரூ.7.68 கோடி மோசடி செய்​திருப்​பது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. புகாரின் அடிப்படையில், டெல்லி சைபர் கிரைம் போலீ​ஸார் ரூ.4.28 கோடியை மீட்டனர்.இதுகுறித்து டெல்லி இணை ஆணை​யர் வினித் குமார் கூறும்​போது, “இந்த மோசடியின் பின்​னணி​யில் இருப்​பவர்​கள் குறித்து தீவிர விசாரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது. மோசடி​யாக மாற்​றப்​பட்ட வங்​கிக் கணக்​கு​கள் முடக்​கப்​பட்டு உள்​ளன. சமூக வலைதளங்கள் வாயி​லாக வரும் தகவல்​களின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்​வது அவசி​யம்​" என்​று தெரிவித்​தா​ர்​.

SCROLL FOR NEXT