மொபைல் டவர் முன்பு குவிந்துள்ள கொண்டபள்ளி கிராம மக்கள்.

 
இந்தியா

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் ஆதிக்கம் இருந்த பகுதியில் மொபைல் டவர் முன் விளக்கேற்றி கொண்டாட்டம்

ஆசையாக தொட்டுப் பார்த்த கிராம முதியவர்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்​பூர் மாவட்​டம் பஸ்​தார் பகு​தியில் உள்​ளது கொண்​டபள்ளி கிராமம். தெலங்​கானா - சத்​தீஸ்​கர் மாநிலங்​களின் எல்​லைப் பகு​தி​யில் இந்த கிராமம் அமைந்​துள்​ளது.

இந்த கிராமம் அடர்ந்த வனப்​பகு​தி​யில் உள்​ளது. ஆதி​வாசிகள் அதி​கம் பேர் இங்கு வசிக்​கின்​றனர். இங்கு மாவோ​யிஸ்​டு​களின் ஆதிக்​கம் இருந்​தது. அவர்​களின் ரகசிய கூடாரம் கிராமம் முழு​வதும் இருந்​தது. அவர்​களை மீறி கிராம மக்​களால் ஒன்​றும் செய்ய முடி​யாது.

அவர்​களைப் பற்றி போலீஸுக்கு தகவல் தெரி​விப்​பவர்​களை மாவோ​யிஸ்​டு​கள் சுட்​டுக் கொன்​றனர். இதனால் கிராமத்​தில் மின்​சா​ரம், மொபைல் போன்ற எந்த வசதி​களும் இல்​லாமல் மக்​கள் தனித்து விடப்​பட்​டனர்.

இந்​நிலை​யில், அடுத்த ஆண்டு மே மாதத்​துக்​குள் நாடு முழு​வதும் மாவோ​யிஸ்​டு​களை ஒழிப்​போம். சரணடை​யும் மாவோ​யிஸ்​டு​களுக்கு மறு​வாழ்​வுக்​கான உதவி​கள் செய்​யப்​படும் என்று மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா மற்​றும் மாநில அரசு அறி​வித்​துள்​ளது.

அதன்​படி, ஏராள​மான மாவோ​யிஸ்​டு​கள் சரணடைந்து வரு​கின்​றனர். அவர்​கள் தொழில் செய்ய நிதி​யுதவி அளிக்​கப்​படு​கிறது. பலர் என்​க​வுன்ட்​டரில் கொல்​லப்​பட்​டனர். மேலும், மேம்​பாட்டு பணி​கள் ஒவ்​வொரு கிராம​மாக செய்​யப்​பட்டு வரு​கின்​றன. கூடு​தல் படைகள் பாது​காப்​புக்கு அனுப்​பப்​பட்​டன. சாலை வசதி​கள் ஏற்​படுத்தி தரப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், சத்​தீஸ்​கர் மாநிலத்​தின் பஸ்​தார் பகு​தி​யில் உள்ள கொண்​டபள்ளி கிராமத்​தில், பல ஆண்​டு​களுக்​குப் பிறகு முதல் முறை​யாக மொபைல் போன் நெட்​வொர்க் வசதி ஏற்​படுத்​தப்​பட்​டது. தங்​கள் மொபைல் போன்​களில் சிக்​னல் கிடைத்​ததும் ஆதி​வாசி கிராம மக்​கள், புதி​தாக அமைக்​கப்​பட்ட மொபைல் போன் டவர் அரு​கில் கூடினர். அங்கு மேள தாளத்​துடன் ஆட்​டம் பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

மேலும், கிராமத்​தில் வசிக்​கும் முதி​ய​வர்​கள், அந்த மொபைல் டவரை ஆசை​யாக தொட்​டுப் பார்த்​தனர். பெண்​கள் பலர் டவர் அரு​கில் விளக்​கேற்றி அதை வழிபட்​டனர். இந்த நடவடிக்கை சுதந்​திர​மாக வாழ முடி​யும் என்ற நம்​பிக்​கையை கிராம மக்​களுக்கு அளித்​துள்​ளது.

பல ஆண்​டு​களுக்​குப் பிறகு முதல் முறை​யாக வெளி​யுல​கத்​துடன் தொடர்பு கொள்​வதற்​கான வழி ஏற்​படுத்தி தரப்​பட்​டுள்​ளது என்று கிராம மக்​கள் உணர்ச்சி வசப்​பட்டு கூறுகின்​றனர். எங்​களுக்​குப் புது வாழ்க்கை கிடைத்​துள்​ளது என்று கிராமத்​தினர் தெரிவிக்​கின்​றனர். இதற்​காக சத்​தீஸ்​கர் முதல்​வர் விஷ்ணு தி​யோ சாய்க்​கு கிராம மக்​கள்​ மனமார்ந்​த நன்​றி தெரி​வித்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT