இந்தியா

தெலங்கானா ஏரிக்கரையில் சிதறி கிடந்த ரூ.500 கள்ள நோட்டுகள்

செய்திப்பிரிவு

கம்மம்: தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம், லச்சாபுரத்தில் உள்ள ஏரிக்கரையில், நேற்று அதிகாலை 500 ரூபாய் நோட்டுகள் நாலா புறமும் சிதறி கிடந்தன. இதனை பார்த்த அப்பகுதியினர் ஆச்சரியப்பட்டனர்.

இது குறித்து லச்​சாபுரம் போலீ​ஸாருக்கு தகவல் எட்​டியது. உடனே போலீ​ஸார் சம்பவ இடத்​திற்கு சென்று அங்கு சிதறி கிடந்த சுமார் 30 ஆயிரம் மதிப்​புள்ள 500 ரூபாய் நோட்​டு​களை சேகரித்து சோதித்து பார்த்​தனர். அப்​போது அவை அனைத்​துமே கள்ள நோட்டு​கள் என்​பது தெரிய​வந்​தது. யாரோ கள்ள நோட்​டு​களை மாற்ற பயந்​து, இங்​குள்ள ஏரிக்​கரை​யில் வீசி விட்டு சென்றுள்ளனர் என போலீ​ஸார் கருதுகின்​றனர். இது குறித்து போலீ​ஸார் வி​சா​ரணை நடத்தி வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT