இந்தியா

பிஎஸ்எல்வி-சி62 ராக்கெட் மூலம் இஓஎஸ்-என் 1 செயற்கைக்கோள் நாளை விண்ணில் பாய்கிறது

புவி கண்காணிப்பு, ராணுவப் பாதுகாப்புக்கு உதவும்

செய்திப்பிரிவு

சென்னை: ராணுவப் பயன்​பாட்​டுக்​காக பாது​காப்பு ஆராய்ச்​சி, மேம்​பாட்டு நிறு​வனம் (டிஆர்​டிஓ) தயாரித்த இஓஎஸ்​-என் 1 செயற்​கைக்கோள், பிஎஸ்​எல்​வி-சி62 ராக்​கெட் மூலம் நாளை விண்​ணில் செலுத்​தப்பட உள்​ளது.

நாட்​டுக்​குத் தேவை​யான தொலை​தொடர்​பு, தொலை உணர்​வு, வழி​காட்​டு​தல் செயற்​கைக் கோள்​களை பிஎஸ்​எல்​வி, ஜிஎஸ்​எல்​வி, எல்​விஎம்-3 ராக்​கெட்​ மூலம் இந்​திய விண வெளி ஆய்வு நிறு​வனம் (இஸ்ரோ) விண்​ணில் நிலைநிறுத்தி வரு​கிறது. வணிகரீதி​யாக​வும் செயற்​கைக் கோள்​களை விண்​ணுக்கு அனுப்​பு​கிறது.

இதற்​கிடையே, ராணுவப் பயன்​பாட்​டுக்​கான இஓஎஸ்​-என் 1 (‘அன்​விஷா’) எனும் அதிநவீன செயற்​கைக் கோளை பாது​காப்பு ஆராய்ச்​சி, மேம்​பாட்டு நிறு​வனம் (டிஆர்​டிஓ) தயாரித்​துள்​ளது. ஆந்​திர மாநிலம் ஹரி​கோட்​டா​வில் உள்ள சதீஷ் தவான் விண்​வெளி மையத்​தின் முதல் ஏவுதளத்​தில் இருந்து பிஎஸ்​எல்​வி-சி62 ராக்​கெட் மூலம்

இந்த செயற்​கைக்​கோள் நாளை காலை 10.17 மணிக்கு விண்​ணில் செலுத்தப்பட உள்ளது. இதனுடன் இந்​தியா மற்​றும் வெளி​நாடு​களுக்குச் சொந்தமான 15 சிறிய செயற்​கைக் கோள்​களும் விண்​ணில் செலுத்​தப்பட உள்​ளன. இதில் முதன்மை செயற்​கைக் கோளான ‘அன்​விஷா’, பூமி​யில் இருந்து 505 கி.மீ. உயரம் கொண்ட சூரிய ஒத்​திசைவு சுற்​றுப்​பாதை​யில் நிலை நிறுத்​தப்​படும்.

இது புவி கண்​காணிப்​பு, ராணுவ பாது​காப்​புக்கு உதவியாக உளவுப் பணி​களை மேற்​கொள்​ளும். இதன்​மூலம் நாட்​டின் பாது​காப்பு வலுப்​பெறும். விவ​சா​யம், நகர்ப்​புற திட்​ட​மிடல், சுற்​றுச்​சூழல் ஆய்வு உள்​ளிட்ட பணி​களுக்​கும் இந்த செயற்கைக்கோள் பயன்​படுத்​தப்​படும்.

மற்ற செயற்​கைக்கோள்​களில் ‘ஆயுள்​சாட்’, சென்​னையைச் சேர்ந்த ஆர்​பிட் எய்டு எனும் ஸ்டார்ட்​-அப் நிறு​வனத்​தின் தயாரிப்​பாகும். இது புவிவட்​டப்​பாதை​யில் சுற்றி வரும் செயற்​கைக் கோளில் மீண்​டும் எரிபொருள் நிரப்​புதல் குறித்து ஆய்வு மேற்​கொள்​ளும். மேலும், ஸ்பெ​யின் ஸ்டார்ட்​-அப் நிறு​வனம் உரு​வாக்​கிய கிட் (KID - Kestrel Initial Technology Demonstrator) எனும் சிறிய விண்​கலத்தை பூமிக்கு மீண்​டும் தரை​யிறக்​கும் சோதனை​யும் மேற்​கொள்​ளப்பட உள்​ளது.

இந்​நிலை​யில், ராக்​கெட் பயணத்​துக்​கான 24 மணி நேர கவுன்​ட்​-ட​வுன் இன்று காலை தொடங்க உள்​ளது. மேலும் ராக்கெட் ஏவுதலுக்கு முந்​தைய பரிசோதனை​களில் இஸ்ரோ விஞ்​​ஞானிகள் தீவிர​மாக ஈடு​பட்​டுள்​ளனர்​.

SCROLL FOR NEXT