இந்தியா

70 ஆண்டுகளை நிறைவு செய்த அமலாக்கத் துறை: 94% குற்றங்கள் நிரூபணம், ரூ.2.36 லட்சம் கோடி சொத்து முடக்கம்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: மத்​திய அரசின் கீழ் செயல்​படும் அமலாக்​கத் துறையின் 70-வது நிறுவன தின விழா டெல்​லி​யில் நடை​பெற்​றது. இதில் மத்​திய நிதித் துறை இணை அமைச்​சர் பங்​கஜ் சவுத்​ரி, வருவாய்த் துறைச் செயலர் அரவிந்த் ஸ்ரீவஸ்​த​வா, கூடு​தல் சொலிசிட்​டர் ஜெனரல் எஸ்​.​வி.​ராஜு, அமலாக்​கத் துறை மூத்த அதி​காரி​கள் பங்​கேற்​றனர்.

நிகழ்ச்​சி​யில் அமலாக்​கத் துறை இயக்​குனர் ராகுல் நவீன் அறிக்கை சமர்ப்​பித்​தார். அதில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: இந்த நிகழ்ச்சி கொண்​டாட்​டத்​துக்கு மட்​டுமல்​லாமல், சுய பரிசோதனை செய்​ய​வும் எதிர்​காலத்​துக்​கான பாதையை வகுக்கவும் முக்​கிய​மானது. வங்கி மோசடிகள், நிறுவன முறைகேடு​கள், ரியல் எஸ்​டேட் மோசடிகள் போன்​றவற்​றின் மீதே அமலாக்​கத் துறை​யின் கவனம் உள்​ளது.

தற்​போது, கிரிப்டோ மோசடி, சைபர் குற்​றம், தீவிர​வாதத்​துக்கு நிதி​யளித்​தல் மற்​றும் போதைப்​பொருள் கடத்​தல் போன்ற புதிய சவால்​கள் உரு​வெடுத்​துள்​ளன. இந்த குற்​றங்​களை எதிர்​கொள்ள அமலாக்​கத் துறை தனது அணுகு​முறையை மாற்றி அமைத்​துள்​ளது. குறிப்​பாக போதைப் பொருள் கடத்​தல் வலைப் பின்​னல்​களைப் பொருளா​தார ரீதி​யாக முடக்​கு​வ​தில் அதிக கவனம் செலுத்தி வரு​கிறது.

உதா​ரண​மாக, செங்​கோட்டை குண்​டு​வெடிப்பு வழக்​கில், தீவிர​வாதம் மற்​றும் உளவு நடவடிக்​கைகளு​டன் அதன் தொடர்​புடைய பண மோசடி வழக்​கு​களில் அமலாக்​கத் துறை விரை​வான மற்​றும் கடுமை​யான நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறது. 2025-26 நிதி​யாண்​டில் அமலாக்​கத் துறை 155 கூடு​தல் புகார்​கள் உட்பட மொத்​தம் 812 குற்​றப்​பத்​திரி​கைகளைத் தாக்​கல் செய்​துள்​ளது. இது அதற்கு முந்​தைய ஆண்டைவிட 2 மடங்கு அதிகம்.

அமலாக்​கத் துறை பதிவு செய்த வழக்​கு​களில், இது​வரை 94 சதவீதக் குற்​றங்​கள் நிரூபண​மாகி உள்​ளன. தற்​போது சுமார் 2,400 வழக்​கு​கள் நீதி​மன்​றங்​களில் நிலு​வை​யில் உள்​ளன. இவற்​றின் மீதான தீர்ப்​பு​கள் விரை​வில் வெளி​யாகும். இது​வரை மொத்​தம் ரூ.2,36,017 கோடி மதிப்​பிலான சட்​ட​விரோதச் சொத்​துக்​கள் முடக்​கப்​பட்​டுள்​ளன. கடந்த நிதி​யாண்​டில் மட்​டும் ரூ.81,422 கோடி மதிப்​பிலான சொத்​துக்​கள் கைப்​பற்​றப்​பட்​டன. இது முந்​தைய ஆண்டை விட 170 சதவீதம் அதி​கம்.

மேலும், வங்​கி​கள், முதலீட்​டாளர்​கள் மற்​றும் வீடு வாங்​கு​வோர் போன்ற பாதிக்​கப்​பட்ட தரப்​பினருக்கு ரூ.63,142 கோடி திரும்ப ஒப்​படைத்​துள்​ளது. பிஏசிஎல் லிமிடெட் மோசடி வழக்​கில், முதலீட்​டாளர்​களுக்கு ரூ.15,581 கோடி திரும்ப வழங்​கப்​பட்​டுள்​ளது. உதய்​பூரைச் சேர்ந்த மற்​றொரு ரியல் எஸ்​டேட் வழக்​கில், இருநூற்​றுக்​கும் அதி​க​மான வீடு​களை வாங்​கு​வோருக்கு அவர்​களின் சொத்​துக்​கள் திரும்ப ஒப்​படைக்​கப்​பட்​டன.

இது​வரை, எப்​இஒஏ (தப்பி ஓடிய பொருளா​தா​ரக் குற்​ற​வாளி​கள் சட்​டம்) கீழ் 54 நபர்​களுக்கு எதி​ராக நடவடிக்​கைகள் தொடங்​கப்​பட்​டுள்​ளன. அவர்​களில் 21 பேர் ‘தப்பி ஓடிய குற்​ற​வாளி​கள்’ என்று அறிவிக்​கப்​பட்​டு, ரூ.2,178 கோடி மதிப்​பிலான சொத்​து​கள் கைப்​பற்​றப்​பட்​டுள்​ளன. இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.

SCROLL FOR NEXT