அதிபர் ட்ரம்ப், எலான் மஸ்க், பிரதமர் மோடி

 
இந்தியா

ட்ரம்ப் - மோடி பேச்சில் எலான் மஸ்க் பங்கேற்கவில்லை: வெளியுறவுத் துறை விளக்கம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஈ​ரான் போர் நில​வரம் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடி இடையே நடை​பெற்ற தொலைபேசி பேச்​சின் போது, அமெரிக்க தொழில​திபர் எலான் மஸ்க் பங்​கேற்​றார் என்று வெளி​யான தகவலை மத்​திய வெளி​யுறவுத் துறை மறுத்​துள்​ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடி​யுடன் கடந்த 24-ம் தேதி தொலைபேசி​யில் பேசி​னார். இரு​வரும் ஈராக் போர் நில​வரம் குறித்து பேசினர். இதுகுறித்து எக்ஸ் தளத்​தில் கருத்து தெரி​வித்த பிரதமர் மோடி, ‘‘மேற்​காசிய நில​வரம் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப், என்​னுடன் தொலைபேசி​யில் பேசி​னார். இப்​பகு​தி​யில் விரை​வில் அமைதி ஏற்பட வேண்​டும், ஹார்​முஸ் ஜலசந்தி திறந்து விடப்பட வேண்​டும் என இந்​தியா விரும்​புவ​தாக தெரி​வித்​தேன். இப்​பகு​தி​யில் அமைதி மற்​றும் நிலைத்​தன்மை ஏற்​படுத்​தும் முயற்​சி​யில் தொடர்ந்து ஈடுபட இரு தலை​வர்​களும் ஒப்​புக் கொண்​டோம்’’ என கருத்து தெரி​வித்​திருந்​தார்.

          

இதுகுறித்து நியூ​யார்க் டைம்ஸ் பத்​திரிகை வெளி​யிட்ட தகவலில், ‘‘ஈரான் போர் நில​வரம் குறித்து அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடி இடையே நடை​பெற்ற தொலைபேசி உரை​யாடலின் போது, தொழில​திபர் எலான் மஸ்க்​கும் பங்​கேற்​றார். போர் நில​வரம் குறித்து இரு​நாட்டு தலை​வர்​கள் இடையே நடை​பெறும் பேச்​சு​வார்த்​தை​யில், தனி​யார் நபர் பங்​கேற்​பது வழக்​கத்​துக்கு மாறானது’’ என்று தெரி​வித்​திருந்​தது.

இதுகுறித்து மத்​திய வெளி​யுறவுத் துறை செய்தி தொடர்​பாளர் நேற்று கூறுகை​யில், ‘‘இந்​தக் கதையை நாங்​கள் பார்த்​தோம். கடந்த 24-ம் தேதி பிரதமர் மோடி மற்​றும் அதிபர் ட்ரம்ப் இரு​வர் மட்​டும்​தான் தொலைபேசி​யில் பேசினர். அப்​போது வேறு யாரும் இடம்​பெற​வில்​லை’’ என்றார்​.

SCROLL FOR NEXT