ம​கா​ராஷ்டிர துணை முதல்​வர் ஏக்​நாத் ஷிண்​டே

 
இந்தியா

ஏக்நாத் ஷிண்டே மருத்துவமனையில் அனுமதி

செய்திப்பிரிவு

மும்பை: ம​கா​ராஷ்டிர துணை முதல்​வர் ஏக்​நாத் ஷிண்​டே, வைரஸ் காய்ச்​சல் காரண​மாக மருத்​து​வ​மனையில் அனுமதிக்கப்பட்​டுள்​ள​தாக அதி​காரி ஒரு​வர் கூறி​னார்.

இதுதொடர்​பாக அந்த அதி​காரி கூறுகை​யில், “கடந்த சில நாட்களாக சளி மற்​றும் காய்ச்​சலால் அவதிப்​பட்டு வந்த ஷிண்டே அதற்​காக சிகிச்சை பெற்று வந்​தார்.

இந்​நிலை​யில் வெள்​ளிக்​கிழமை அவர் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டார். அவர் கட்​டா​யம் ஓய்​வெடுக்க வேண்​டும் என மருத்​து​வர்​கள் அறி​வுறுத்​தினர். ஷிண்டே வெகு விரை​வில் மருத்​து​வ​மனை​யில் இருந்து டிஸ்​சார்ஜ் செய்​யப்​படு​வார் என எதிர்​பார்க்​கிறோம்” என்​றார்​.

SCROLL FOR NEXT