இந்தியா

“எதற்கும் கவலைப்பட வேண்டாம்” - பாஜகவுக்கு ஆதரவளிக்கும் வேற்று கட்சி எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி உறுதி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: எதற்​கும் கவலைப்பட வேண்​டாம்; நான் உங்​களு​டன் இருக்​கிறேன் என்று பாஜக​வுக்கு ஆதரவு அளிக்​கும் மாற்று கட்​சி எம்​.பி.க்​களிடம் பிரதமர் மோடி தெரி​வித்​தார்.

டெல்​லி​யில் நேற்று பிரதமர் மோடி அளித்த காலை நேர சிற்றுண்டி விருந்து நிகழ்ச்சியில் திரிண​மூல் காங்​கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்​.பி.க்​கள், சிவசே​னா(உத்​தவ்) கட்சியிலிருந்து வில​கிய 7 எம்​.பி.க்​கள், தேசிய மக்​கள் கட்​சி​யின் (என்​பிபி) 20 எம்​.பி.க்​கள், தேசி​ய​வாத காங்​கிரஸ் கட்​சி​யின் (அஜித்பவார் பிரிவு) 2 எம்​.பி.க்​கள் உட்பட 45 எம்​.பி.க்​கள் கலந்து கொண்​டனர்.

இந்​நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது: பாஜக​வுக்கு ஆதரவு அளிக்​கும் உங்​களுக்கு எனது நன்​றி. நாடாளு​மன்​றத்​தின் வரலாற்​றைப் படித்து, கற்​று, புரிந்​து​கொண்டு நீங்​கள் நடக்க வேண்​டும். நாடாளு​மன்ற விவாதங்​களில் நீங்​கள் தீவிர​மாகப் பங்கேற்க வேண்​டும். நாடாளு​மன்​றம் என்​பது ஜனநாயகத்​தின் உன்னத ஆலய​மாகும். நாடாளு​மன்​றத்​தில் நடை​பெற்று வரும் அமளி​யால் புதிய எம்​.பி.க்​களுக்கு அவை​யில் பேச வாய்ப்பு கிடைக்​க​வில்லை என்று எனக்​குத் தெரிய​வந்​துள்​ளது.

இது உங்​களுக்கு இழைக்​கப்​படும் அநீ​தி. நாடாளு​மன்ற நடவடிக்கைகள் சுமுக​மாக நடை​பெற வேண்​டும். சமீப​கால​மாக நாடாளு​மன்​றத்​தில் நடை​பெற்று வரும் நடவடிக்​கைகள் எனக்கு கவலை அளிக்​கின்​றன. நாடாளு​மன்​றத்​தில் ஏராள​மான வரலாற்றுத் தகவல்​கள் உள்​ளன. விவாதங்​களுக்​குத் தயா​ராக அவற்றை படித்து பயன்​படுத்த வேண்​டும். எம்​.பி.க்​கள் அவர்​கள் சார்ந்த மாநிலங்​களின் வளர்ச்​சிக்​காகப் பணி​யாற்ற வேண்​டும். மாநிலங்​கள் முன்​னேறி​னால் மட்​டுமே நாடு முன்​னேறும்.

தேசிய ஜனநாயகக் கூட்​டணி ஒரு குடும்​பம் போன்​றது. நாங்​கள் கூட்​ட​ணிக் கட்​சிகளு​டன் இணைந்து செயல்​படு​கிறோம். ஒவ்வொரு தனி​நபரும் மதிக்​கப்​படு​வார்​கள். அனை​வருக்​கும் வாய்ப்​பளிக்​கப்​படும். நான் தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யின் ஒரு குறிப்​பிட்ட கட்​சி​யைச் சார்ந்​தவன் மட்​டுமல்ல, அனைத்து நாடாளு​மன்ற உறுப்​பினர்​களு​ட​னும் நான் ஒருங்​கிணைந்து இருக்கிறேன். கூட்​ட​ணி​யின் ஒவ்​வொரு நாடாளு​மன்ற உறுப்​பினருக்​கும் நான் உறு​துணை​யாக நிற்​பேன். யாரும் எதைப் பற்றியும் கவலைப்​படத் தேவை​யில்​லை. இவ்​வாறு அவர் தெரிவித்தார்.

முன்​ன​தாக திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யின் அதிருப்தி எம்.பி.க்கள் மற்​றும் சமீபத்​தில் ஏக்​நாத் ஷிண்​டே​வின் சிவசேனாவில் இணைந்த சிவசேனா (உத்​தவ் பிரிவு) எம்​.பி.க்​கள் 6 பேரை​யும் சந்​தித்​துப் பேசிய பிரதமர் மோடி, நான் உங்​களு​டன் இருக்​கிறேன். எதற்​கும் கவலைப்​பட வேண்​டாம்​. இவ்​வாறு பிரதமர்​ உறுதியளித்தார்​.

SCROLL FOR NEXT