இந்தியா

கர்நாடக முதல்வராக டி.கே.சிவகுமார் இன்று ப‌தவியேற்பு

துணை முதல்வர், அமைச்சர் பதவி கோரி மூத்த தலைவர்கள் நெருக்கடி

இரா.வினோத்

பெங்களூரு: கர்​நாடக முதல்​வ​ராக டி.கே.சிவகு​மார் இன்று மாலை பதவி​யேற்​கிறார். இந்​நிலை​யில் துணை முதல்​வர், அமைச்​சர் பதவி வழங்​கக்​கோரி மூத்த தலை​வர்​கள் காங்​கிரஸ் மேலிடத்​துக்கு அழுத்​தம் தரு​வ​தால் அமைச்​சரவை பட்​டியல் தயாரிப்​ப​தில் சிக்​கல் ஏற்​பட்​டுள்​ளது.

கர்​நாடக முதல்​வ​ராக இருந்த சித்​த​ராமையா காங்​கிரஸ் மேலிடத்தின் வலி​யுறுத்​தலின்​பேரில் கடந்த 28ம் தேதி தனது பதவியை ராஜி​னாமா செய்​தார். இதையடுத்து, நடந்த காங்​கிரஸ் சட்​டப்​பேரவை குழு கூட்​டத்​தில், அதன் தலை​வ​ராக டி.கே.சிவகுமார் ஒரு​மன​தாக தேர்வு செய்​யப்​பட்​டார். மேலும் ஆளுநர் தாவர்​சந்த் கெலாட்டை சந்​தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி​னார்.

இதைத் தொடர்ந்து இன்று கர்​நாடக மக்​கள் மாளி​கை​யில் எளிமை​யான முறை​யில் நடை​பெறும் நிகழ்​வில் டி.கே.சிவகு​மார் புதிய முதல்​வ​ராக பதவி​யேற்​கிறார். அவரது அமைச்​சர​வை​யில் இடம்​பிடிப்​ப​தற்கு காங்​கிரஸ் மூத்த எம்​.எல்.​ஏக்​களிடையே கடும் போட்டி ஏற்​பட்​டுள்​ளது. சித்​த​ராமை​யா​வின் அமைச்​சர​வை​யில் அமைச்​சர்​களாக இருந்த ஜார்​ஜ், முனியப்பா உள்​ளிட்ட மூத்த தலை​வர்​கள் மீண்​டும் தங்​களது பதவியை தக்க வைத்​துக் கொள்வதற்​காக டெல்​லி​யில் முகாமிட்டு காய்​களை நகர்த்தி வருகின்​றனர்.

சித்​த​ராமையா தனது மகனும் எம்​எல்​சி​யு​மான யதீந்​தி​ரா​வுக்கு அமைச்​சர் பதவி வழங்க வேண்​டும் என மேலிடத்தை வலியுறுத்திய​தாக கூறப்​படு​கிறது. இந்​நிலை​யில் டி.கே.சிவகுமாரின் ஆதர​வாளர்​கள், கடந்த 3 ஆண்​டு​களாக அமைச்​சர்​களாக இருந்​த‌வர்​களுக்கு மீண்​டும் பதவி வழங்கக்கூடாது. புதி​ய​வர்​களுக்கு வாய்ப்பு வழங்க வேண்​டும் என வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

புதிய அமைச்​சர​வை​யில் சாதி​வாரி​யாக​வும், மண்​டலம் வாரியாகவும் பிர​தி​நி​தித்​து​வம் அளிக்க வேண்​டும் என பட்டியலின, ஓபிசி, சிறு​பான்​மை​யின பிரிவு​களை சேர்ந்த மூத்த தலை​வர்​கள் அழுத்​தம் கொடுத்​துள்​ளனர். அமைச்​சர் பதவி பெறுவதற்​காக பிரி​யங்க் கார்​கே, பரமேஷ்வர், ஜார்​ஜ், முனியப்பா, பொன்​னண்​ணா, ரிஸ்​வான், ஜமீர் அஹமது, ஹாரீஷ் உட்பட 20-க்​கும் மேற்​பட்​டோர் டெல்​லி​யில் முகாமிட்​டுள்​ளனர்.

துணை முதல்​வருக்கு போட்டி: இதனிடையே பரமேஷ்வர், முனியப்​பா, ஜமீர் அஹமது, எம்​.பி.​பாட்​டீல், யு.டி.​காதர், சதீஷ் ஜார்​கிஹோளி ஆகியோர் தங்​களுக்கு துணை முதல்​வர் பதவி வழங்க வேண்​டும் என காங்​கிரஸ் மேலிடத் தலை​வர்​களிடம் வலியுறுத்​தி​யுள்​ளனர். சித்​த​ராமை​யா​வும் கர்​நாட​கா​வில் உள்ள 4 மண்​டலங்​களுக்​கும் பிர​தி​நி​தித்​து​வம் அளிக்​கும் வகை​யில் தலா ஒரு துணை முதல்​வர் பதவி​யும், அமைச்​சர் பதவி​களும் பிரித்து தர வேண்​டும் என கூறிய​தாக தெரி​கிறது.

SCROLL FOR NEXT