இந்தியா

டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 9 பேர் கைது

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ, தாவூத்துடன் தொடர்பு இருப்பது அம்பலம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்​லி, மும்பை உள்​ளிட்ட நகரங்​களில் தாக்​குதல் நடத்த திட்​ட​மிட்​டிருந்த 9 பேரை டெல்லி காவல் துறை நேற்று கைது செய்​தது. இவர்​களுக்கு பாகிஸ்​தான் உளவு அமைப்பு மற்றும் தாவூத் இப்​ராஹி​முடன் தொடர்பு இருந்​தது தெரிய​வந்​துள்​ளது. இதுகுறித்து புலனாய்வுத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்​லி, மும்பை உள்ளிட்ட முக்​கிய நகரங்​களில் பாது​காப்பு படை​யினர் மற்​றும் முக்​கிய பொது நிறு​வனங்​கள் மீது தாக்​குதல் நடத்​து​வதற்​கான இறு​திக்​கட்ட திட்​ட​மிடலில் ஒரு கும்​பல் இயங்கி வந்​துள்​ளது. எல்​லை​யின் மறு​புறத்​தில் இருந்து செயல்​படும் பாகிஸ்​தான் உளவு அமைப்பு (ஐஎஸ்​ஐ), தலைமறை​வாக இருக்​கும் நிழல் உலக தாதா தாவூத் இப்​ராஹிம் உள்​ளிட்​டோரின் உத்​தர​வின் பேரில் இவர்​கள் செயல்​பட்டு வந்​ததும் தெரிய​வந்​தது.

இதை அறிந்த உளவுத் துறை​யினர் கொடுத்த துல்​லிய​மான தகவலின் அடிப்​படை​யில், டெல்லி காவல் துறை​யின் சிறப்​பு பிரி​வினர், ஒருங்​கிணைந்த சோதனை​யில் ஈடு​பட்​டனர். அப்​போது 9 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். திட்​ட​மிடப்​பட்ட தாக்​குதல்களை நடத்​து​வதற்​காக சேகரித்து வைக்​கப்​பட்​டிருந்த நவீன ரக துப்​பாக்​கி​கள், கையெறி குண்​டு​கள் உள்​ளிட்ட ஆயுதங்​கள், வெடிபொருட்​களை போலீ​ஸார் பறி​முதல் செய்​துள்​ளனர்.

கைது செய்​யப்​பட்​ட​வர்​கள் டெல்​லி, மகா​ராஷ்டிரா, பஞ்​சாப் உள்​ளிட்ட பல்​வேறு மாநிலங்​களைச் சேர்ந்​தவர்​கள் எனத் தெரிய​வந்​துள்​ளது. மேலும், பிடிபட்​ட​வர்​களில் சில வெளி​நாட்​டினரும் அடங்​கு​வர். இருப்​பினும் அவர்​களது அடை​யாளங்கள் மற்​றும் குடி​யுரிமை குறித்த விவரங்​கள் இன்​னும் உறு​திப்​படுத்​தப்​பட​வில்​லை.

இந்த தீவிர​வாதக் குழு​வுக்​கும், மும்​பை​யில் உள்ள குற்​ற​வியல் நெட்​வொர்க்​கு​களுக்​கும் இடையிலான தொடர்​பு​கள் குறித்து புல​னாய்வு அதிகாரிகள் தீவிர விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். நாடு முழு​வதும் தீவிர​வா​தி​களை ஊடுரு​வச் செய்​வதற்​கும், அவர்​களுக்​கான தளவாடங்​கள் மற்​றும் நிதி ஆதா​ரங்​களை ஏற்​பாடு செய்​வதற்​கும் இந்த குற்​ற​வியல் வழிகள் பயன்​படுத்​தப்​பட்​டிருக்​கலாம் என்று பாது​காப்பு முகமை​கள் கருது​கின்​றன.

இதற்கிடையே, கைது நடவடிக்​கை​யைத் தொடர்ந்து டெல்லி உள்​ளிட்ட முக்​கிய நகரங்​கள், முக்​கிய​த்துவம் வாய்ந்த பகுதிகளில் பாது​காப்பு பலப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இந்​த குழு​வைச் சேர்ந்த மற்ற நபர்​கள் யாரேனும் நாட்​டின் பிற பகு​தி​களில் செயல்​படு​கிறார்​களா என்​ப​தைக் கண்​டறிய, கைது செய்​யப்​பட்​ட​வர்​களின் தகவல் தொடர்பு பதிவு​கள், நிதிப் பரிவர்த்​தனை​கள் மற்​றும் அவர்​களது ஒட்​டுமொத்த வலை​யமைப்பை சிறப்​புப் பிரி​வினர் தீவிர​மாக ஆய்வு செய்து வரு​கின்​றனர்.

நடக்​க இருந்த ஒரு பெரிய அசம்​பா​விதத்​தை தடுத்​த​தில் இந்த நடவடிக்கை ஒரு முக்​கிய மைல்​கல் என்று அதி​காரி​கள் தெரிவித்​துள்​ளனர். கைது செய்​யப்​பட்​ட​வர்​களிடம் நடத்​தப்​படும் விசா​ரணை முழு​மையடைந்​து, பறி​முதல் செய்​யப்​பட்ட பொருட்​கள் முழு​மை​யாக ஆய்வு செய்​யப்​பட்ட பிறகு கூடு​தல் விவரங்​கள் வெளி​யாகும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

கடந்த ஆண்​டு, டெல்​லி​யின் வரலாற்​றுச் சிறப்​புமிக்க செங்​கோட்டை அருகே வாக​னத்தில் வைக்​கப்​பட்ட சக்​தி​வாய்ந்த வெடிபொருள் வெடித்​த​தில்​ 15 பேர்​ உயிரிழந்தது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT