இந்தியா

குறைந்து வரும் வரதட்சணைக் கொடுமை மரணங்கள் - 90 நிமிடங்களுக்கு ஒரு பெண் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்​தி​யப் பிரதேச மாநிலம் போபாலில் ட்விஷா சர்மா என்​பவரும், கிரேட்​டர் நொய்​டா​வில் தீபிகா நகர் என்​பவரும் அண்​மை​யில் அடுத்தடுத்து மரணம்அடைந்த சம்​பவங்​கள், இந்​தி​யா​வில் இன்​னும் தொடர்ந்து வரும் வரதட்சணைக் கொடுமை​களை எடுத்​துக்காட்டின.

இவை ஏதோ தற்​செய​லாக நடந்த தனிப்​பட்ட சம்​பவங்​கள் அல்ல, பல ஆண்​டு​களாகத் தொடரும் அவல​மான பின்​னணி​யின் ஒரு பகு​தியே என்​றும் அதி​காரப்​பூர்​வத் தரவு​கள் நமக்கு வெளிப்​படுத்​துகின்​றன.

தேசிய குற்ற ஆவணக் காப்​பகம் (என்​சிஆர்​பி) வெளி​யிட்​டுள்ள தரவு​களின்​படி, கடந்த 2024-ம் ஆண்​டில் மட்​டும் இந்​தி​யா​வில் 5,737 வரதட்​சணை மரணங்​கள் பதிவாகியுள்ளன.

இது முந்​தைய ஆண்​டு​களு​டன் ஒப்​பிடு​கை​யில் சற்றே சரிவைக் காட்​டினாலும், இப்​பிரச்​சினை​யின் தீவிரத்தை உணர்த்​து​வதற்கு இந்த எண்​ணிக்​கையே போது​மான​தாக உள்​ளது.

கடந்த பத்​தாண்​டு ​காலத் தரவு​களை உற்​று​நோக்​கி​னால், வரதட்சணை மரணங்​களின் எண்​ணிக்கை படிப்​படி​யாகக் குறைந்து வரு​கிறது. 2015-ம் ஆண்​டில் 7,634 ஆக இருந்த மரணங்களின் எண்​ணிக்​கை, 2024-ல் 5,737 ஆகக் குறைந்​துள்​ளது.

இந்த பத்​தாண்​டு​களில் 1,900 மரணங்​கள் குறைந்​துள்ள நிலை சற்றே ஆறு​தல் அளித்​தா​லும், தற்​போதைய புள்​ளி​ விவரங்​களின்​படி நாட்​டில் நாளொன்​றுக்கு சராசரி​யாக 15-க்​கும் மேற்​பட்ட பெண்​கள் வரதட்​சணைக் கொடுமை​யால் உயி​ரிழப்​பது வெளிச்​சத்​திற்கு வந்​துள்​ளது.

அதாவது, ஒவ்​வொரு 90 நிமிடத்​துக்​கும் ஒரு பெண் வரதட்​சணை கொடுமை​யால் உயி​ரிழக்​கிறார். இது இந்த சமூக அவலம் இன்​னும் வீரி​யத்​துடனேயே நீடிக்​கிறது என்​பதை இது உணர்த்​து​வ​தாக அமைந்​து உள்​ளது.

வரதட்​சணைக் கொடுமை மரணங்​களைப் பொருத்​து​வரை​யில் நாடு முழு​வதும் சீராக இல்​லை; மாறாக, குறிப்​பிட்ட சில மாநிலங்​களி​லேயே மிக அதிக அளவில் பதி​வாகி​யுள்​ளன.

குறிப்​பாக, உத்தர பிரதேச மாநிலத்தில் மட்​டும் கடந்த 2024-ல் 2,038 மரணங்​கள் பதிவாகி​யுள்​ளன. இது நாட்​டின் ஒட்​டுமொத்த வரதட்​சணை மரணங்​களில் மூன்​றில் ஒரு பங்​கிற்​கும் அதி​க​மாகும்.

இதற்கு அடுத்​த​படி​யாக பீகாரில் 1,078 மரணங்​களும், மத்​தி​யப் பிரதேசத்​தில் 450 மரணங்​களும் பதி​வாகி​யுள்​ளன. ராஜஸ்​தான் (386), மேற்கு வங்​கம் (337) ஆகிய மாநிலங்​களும் இந்த வரிசை​யில் முன்​னிலை​யில் உள்​ளன.

குறிப்​பிட்ட சில மாநிலங்​களில் மட்​டும் இந்த வழக்​கு​கள் அதி​கள​வில் குவிந்​திருப்​பது, அங்கு வரதட்​சணைக் கொடுமை என்​பது இன்​னும் சமூகத்​தில் ஆழமாக வேரூன்​றி​யிருப்​ப​தைக் காட்​டு​கிறது.

வரதட்​சணைக் கொடுமை​யால் ஏற்​படும் மரணங்​களில், மன உளைச்​சல் மற்​றும் சித்​திர​வதை காரண​மாக நிகழும் தற்​கொலைகளும், பிற சந்​தேகத்​திற்​குரிய மர ணங்​களும் அடங்​கும்.

அதே வேளை​யில், வரதட்​சணைப் ​கொலைகள் எனப்​படும் நேரடி வன்​முறை மரணங்​களை​யும் தேசிய குற்ற ஆவணக்காப்​பகத் தரவு​கள் அப்​பட்​ட​மாக்​கி​யுள்​ளன. அதன்​படி, 2024-ல் மேற்கு வங்​கத்​தில் 163 படுகொலைகளும், ஒடி​சா​வில் 161 படு​கொலைகளும் நிகழ்ந்​துள்​ளன.

ராஜஸ்​தானில் 75, பீகாரில் 66 மற்​றும் உத்தர பிரதேசத்​தில் 58 சம்​பவங்​கள் பதி​வாகி​யுள்​ளன. வரதட்​சணைத் தகராறுகள் எவ்​வாறு ஒரு பெண்​ணின் நேரடிப் படு​கொலை​யில் முடிகின்​றன என்​ப​தற்​கு இந்​த எண்​களே சாட்​சி​யாக உள்​ளன.

SCROLL FOR NEXT