நிதின் ராஜ்

 
இந்தியா

கேரள பல் மருத்துவ கல்லூரி மாணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை

2 பேராசிரியர்கள் அவமானப்படுத்தியதாக தகவல்

செய்திப்பிரிவு

கண்ணூர்: கேரளா​வின் திரு​வனந்​த​புரம் அரு​கே​யுள்ள உழாமலக்​கால் கிராமத்​தைச் சேர்ந்​தவர் நிதின் ராஜ். இவர் கண்​ணூர் மாவட்​டத்​தில் உள்ள தனி​யார் பல் மருத்​து​வக் கல்​லூரி​யில் பிடிஎஸ் பட்​டப்​படிப்பு சுயநி​திப் பிரி​வில் கடந்​தாண்டு சேர்ந்​தார். இவர் எஸ்​.சி பிரிவைச் சேர்ந்​தவர்.

ஆன்​லைன் செயலி மூலம் நிதின் ராஜ் கடன் பெற்று அதை திருப்பி செலுத்​த​வில்​லை. இதனால் கடன் நிறுவன ஏஜென்ட்​டு​கள் நிதின் ராஜை போனில் மிரட்​டி​யுள்​ளனர். மேலும், இது தொடர்​பாக அவர்​கள் கல்​லூரி பேராசிரியர்​களிட​மும் புகார் அளித்​துள்​ளனர்.

          

இந்​நிலை​யில் நிதின் ராஜ் கடந்த வெள்​ளிக் கிழமை கல்​லூரி கட்​டிடத்​தின் மாடி​யில் இருந்து குதித்து தற்​கொலை செய்து கொண்​டார். இவரது மரணத்​தில் சந்​தேகம் இருப்​ப​தாக குடும்​பத்​தினர் தெரி​வித்​திருந்​தனர். இந்​நிலை​யில் நிதின் ராஜ் இறப்​ப​தற்கு முன் வெளி​யிட்ட ஆடியோ ஒன்று கடந்த ஞாயிற்​றுக் கிழமை வெளி​யானது.

அதில் நிதின் ராஜ் கூறி​யிருப்​ப​தாவது: ஒரு பேராசிரியர் என்னை வெளிப்​படை​யாக அவமானப்​படுத்​தி​னார். இதனால் நான் மிக​வும் மனவேதனை அடைந்​தேன். தேர்​வில் நான் எழுத்​துப் பிழை​யுடன் எழு​தி​யிருந்த விடைத்​தாளை அவர் மற்ற மாணவர்​களிடம் காட்​டி​னார். அவர் என்னை முட்​டாள் என அழைத்​தார். நான் ‘சேம் டு யு’ என பதில் அளித்​தேன். கை, கால்​களை வெட்​டு​வேன் என மிரட்​டி​னார். முடிந்​தால் செய்​யுங்​கள் என பதில் கூறினேன். இவ்​வாறு நிதின் ராஜ் கூறி​யுள்​ளார்.

இதையடுத்து துறைத் தலை​வர் மற்​றும் ஒரு பேராசிரியரை கல்​லூரி நிர்​வாகம் சஸ்​பெண்ட் செய்து குற்​றச்​சாட்​டு​கள் தொடர்​பாக விசா​ரணைக்கு உத்​தர​விட்​டுள்​ளது. நிதின் ராஜ் இறப்பு தொடர்​பாக இயற்​கைக்கு முரணான மரணம் என வழக்​குப்​ப​திவு செய்​துள்ள போலீ​ஸார், 2 பேராசிரியர்​கள் மீது எஸ்​.சி., எஸ்​.டி வன்​கொடுமை தடுப்பு சட்​டம், தற்​கொலைக்கு தூண்​டு​தல் ஆகிய பிரிவு​களின் கீழ் வழக்​குப்​ப​திவு செய்​துள்​ளனர்.

SCROLL FOR NEXT