இந்தியா

புதிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு எதிராக காங். சார்பில் ஜன.8 முதல் நாடு தழுவிய போராட்டம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பு​திய ஊரக வேலை உறுதி திட்​டத்​துக்கு எதி​ராக ஜனவரி 8-ம் தேதி முதல் நாடு தழு​விய காங்கிரஸ் கட்சி நடத்​தப்​படும் என்று காங்​கிரஸ் அறி​வித்​துள்​ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறு​தித் திட்​டத்​தின் பெயர், விக்‌ஷித் பாரத் கேரன்ட்டி பார் ரோஜ்கர் அண்ட் அஜீவிகா மிஷன் (கி​ராமின்) (ஜி ராம் ஜி) என்று மாற்​றம் செய்​யப்​பட்டு உள்​ளது. இந்த புதிய ஊரக வேலை உறு​தித் திட்ட மசோதா நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களி​லும் நிறைவேற்​றப்​பட்​டது. இதற்கு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு ஒப்​புதல் வழங்​கி​னார்.

மகாத்மா காந்தி பெயரை நீக்​கியதை கண்​டித்​தும், மசோ​தா​வின் குறிப்​பிட்ட அம்​சங்​களை எதிர்த்​தும் காங்​கிரஸ் போர்க்​கொடி உயர்த்தி உள்​ளது. இதுதொடர்​பாக காங்​கிரஸ் பொதுச்​செய​லா​ளர்​கள் வேணுகோ​பால், ஜெய்​ராம் ரமேஷ் ஆகியோர் டெல்​லி​யில் நேற்று செய்​தி​யாளர்​களுக்கு பேட்​டியளித்​தனர். அப்​போது வேணுகோ​பால் கூறிய​தாவது:

காங்​கிரஸ் கூட்​டணி ஆட்​சிக் காலத்​தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறு​தித் திட்​டம் அமல் செய்​யப்​பட்​டது. இந்த திட்​டத்​தால் வறுமை குறைந்​தது. தொழிலா​ளர்​களின் இடம்​பெயர்வு குறைந்​தது. புதிய கால்​வாய்​கள், அணை​கள் கட்​டப்​பட்​டன. கரோனா பெருந்​தொற்று மற்​றும் நெருக்​கடி​யான காலங்​களில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்​டம் மக்​களின் பாது​காவல​னாக விளங்​கியது.

காங்​கிரஸ் கொண்டு வந்த இந்த திட்​டத்​துக்கு மாற்​றாக ஜி ராம் ஜி என்ற புதிய திட்​டத்தை பாஜக அரசு அமல்​படுத்தி உள்​ளது. புதிய திட்​டத்​தில் வேலை​வாய்ப்​புக்கு உத்​தர​வாதம் அளிக்​கப்​பட​வில்​லை. இந்த திட்​டத்​துக்​கான நிதி முறை​யாக ஒதுக்​கப்​பட​வில்​லை. மகாத்மா காந்தி ஊரக வேலை​வாய்ப்பு உறுதி திட்​டத்தை மத்​திய அரசு மறை​முக​மாக அழித்து வரு​கிறது. இவ்​வாறு வேணுகோ​பால் தெரி​வித்​தார்.

ஜெய்​ராம் ரமேஷ் கூறிய​தாவது: மத்​திய அரசு 3 விவ​சாய சட்​டங்​களை கொண்டு வந்​தது. விவ​சா​யிகளின் போராட்​டத்​தால் அந்த 3 சட்​டங்​களும் வாபஸ் பெறப்​பட்​டன. தற்​போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்​டத்​துக்கு மாற்​றாக ஜி ராம் ஜி திட்​டத்தை மத்​திய அரசு அமல்​படுத்தி உள்​ளது. இதனால் ஒட்​டுமொத்த நாடும் பாதிக்​கப்​படும். புதிய திட்​டத்தை ரத்து செய்​து​விட்​டு, பழைய திட்​டத்தை அமல்​படுத்த வேண்​டும்.

மகாத்மா காந்தி ஊரக வேலை​வாய்ப்​புத் திட்​டம் காக்​கும் இயக்​கம் என்ற பெயரில் காங்​கிரஸ் சார்​பில் ஜனவரி 8-ம் தேதி நாடு தழு​விய போராட்​டம் தொடங்​கப்​படும். இந்த போ​ராட்​டம் தொடர்ந்து 45 நாட்​கள் நீடிக்​கும். இது தேசி​ய இயக்​க​மாக இருக்​கும்​. இவ்​வாறு அவர் தெரிவித்​தார்​.

SCROLL FOR NEXT