இந்தியா

சிஜேபியினர் டெல்லியில் முற்றுகை: போராட்டக்காரர்களை கலைக்க தடியடி, கண்ணீர் புகை குண்டுவீச்சால் பதற்றம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நீட் தேர்வு முறைகேடு​களைக் கண்​டித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி​யினர் நேற்று நாடாளு​மன்​றம் நோக்கி பேரணி சென்றபோது அவர்களை கலைக்க தடியடி, கண்ணீர் புகை குண்​டு​கள் வீசப்​பட்​ட​தால் பதற்​றம் நில​வியது.

நீட் தேர்​வில் நடை​பெறும் முறை​கேடு​களை கண்​டித்​தும், மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் பதவி வில​கக் கோரி​யும் கரப்​பான்பூச்சி ஜனதா கட்​சி​யினர் (சிஜேபி) டெல்லி ஜந்​தர் மந்​தரில் தொடர் போ​ராட்​டம் நடத்தி வரு​கின்​றனர். இதில், சமூக ஆர்​வலர் சோனம் வாங்​சுக் கலந்​து​கொண்டு 21 நாட்​கள் உண்​ணா​விரதம் மேற்​கொண்ட நிலை​யில் அவர் கட்​டாய​மாக மருத்​து​வ​மனைக்கு மாற்​றப்​பட்​டார்.

இந்த நிலை​யில், நேற்று நாடாளு​மன்​றம் நோக்கி முற்​றுகை போ​ராட்​டத்தை சிஜேபி கட்​சி​யினர் தொடங்கினர். இதற்கு டெல்லி காவல் துறை அனு​மதி மறுத்த நிலை​யிலும் இதில், இளைஞர்​கள், பெண்​கள் என 20,000-க்​கும் மேற்​பட்​டோர் கலந்து கொண்​டனர். இந்தப் போராட்​டத்​தின் போது டெல்​லி​யில் பெரும் வன்​முறை வெடித்​தது. தடையை மீறிப் பேரணி​யாகச் செல்ல முயன்ற ஆயிரக்​கணக்​கான இளைஞர்​கள் மீது காவல்​துறை​யினர் கண்​ணீர்ப்​பு​கைக் குண்​டு​களை வீசி​யும், தடியடி நடத்​தி​யும் கூட்​டத்தை கலைக்க முயன்​றனர்.

இதனால், பெரும் பதற்​றம் ஏற்​பட்​டதுடன் பல பகு​தி​களில் கடும் போக்​கு​வரத்து நெரிசலும் உண்​டானது. போ​ராட்​டக்​காரர்​கள், போலீ​ஸாருக்கு இடையே தள்​ளு​முள்ளு ஏற்​பட்​ட​தில் இருதரப்​பிலும் காயங்​கள் ஏற்​பட்​டன. மற்​றொரு​புறம், தீவிரமடைந்த இப்​போ​ராட்​டத்தை தணிக்​கும் முயற்​சி​யாக மத்​திய அமைச்​சர் ஜே.பி. நட்​டாவை சிஜேபி கட்​சி​யின் செய்​தித் தொடர்​பாளர்​கள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகிய இரு​வரும் அவரது இல்​லத்​தில் நேரில் சந்​தத்​துப் பேசினர். சுமார் 2 மணி நேரக் காத்​திருப்​புக்​குப் பிறகு நடை​பெற்ற இந்த 10 நிமிடச் சந்​திப்​பின் போது, கட்​சி​யின் சார்​பில் முக்​கியக் கோரிக்​கைகள் அடங்​கிய மனு மத்​திய அமைச்​சரிடம் வழங்​கப்​பட்​டது.

3 முக்​கியக் கோரிக்​கைகள்

மருத்​து​வப் பரிசோதனைக்​காக சஃப்​தர்​ஜங் மருத்​து​வ​மனை​யில் வைக்​கப்​பட்​டுள்ள சமூக ஆர்​வலர் சோனம் வாங்​சுக்கை உடனடி​யாக விடு​தலை செய்ய வேண்​டும்.

தேர்வு முறை​கேடு​களுக்​குப் பொறுப்​பேற்று மத்​திய கல்வி அமைச்சர் தர்​மேந்​திர பிர​தான் உடனடி​யாகப் பதவி விலக வேண்​டும். நீட் தேர்வு முறை​கேடு​களால் மன உளைச்​சலுக்கு ஆளாகி தற்​கொலை செய்​து​கொண்ட மாணவர்​களின் குடும்​பங்​களுக்​குத் தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்​டும் என்​பது அவர்​களின் முக்​கிய கோரிக்​கை​களாக இருந்​தன.

இந்​தக் கோரிக்​கைகள் குறித்து பாஜக​வின் உயர்​மட்​டத் தலைமையுடன் கலந்​தாலோ​சித்து முடி​வெடுக்க அவகாசம் தேவை என அமைச்​சர் ஜே.பி. நட்டா தெரி​வித்​த​தாக அக்​கட்​சி​யின் பிர​தி​நி​தி​கள் கூறி​யுள்​ளனர். பாது​காப்பு முன்​னெச்​சரிக்​கை​யாக மத்​திய டெல்​லி​யின் சில பகு​தி​களில் மொபைல் இணைய சேவை நேற்று துண்​டிக்​கப்​பட்​டது.

மேலும் ராஜீவ் சவுக், ஜன்​பத், படேல் சவுக், மத்​திய செயல​கம், சேவா தீர்த் ஆகிய 5 முக்​கிய மெட்ரோ ரயில் நிலை​யங்​கள் தற்​காலிக​மாக மூடப்​பட்​ட​தால் ஆயிரக்​கணக்​கான பயணி​கள் கடும் அவதிக்​குள்​ளாகினர்.

சோனம் வாங்​சுக் நிபந்​தனை

இதனிடையே இந்த போ​ராட்​டத்​தில் பங்​கேற்க தன்னை அனுமதிக்க வேண்​டும் என வாங்​சுக் மருத்​து​வ​மனை நிர்வாகத்துக்கு முன்​ன​தாக கடிதம் ஒன்றை எழு​தி​னார். கடிதத்தில், “தேர்வு முறை​கேடு​களுக்கு அரசு முழுப் பொறுப்​பேற்க வேண்​டும்; அல்​லது நா​டாளு​மன்​றத்​தில் இதுகுறித்து அனைத்​துக் கட்சி எம்​.பி-க்​களும் குரல் எழுப்​பு​வார்​கள் என உறுதி அளிக்க வேண்​டும். அப்​போது​தான் எனது உண்​ணா​விரதத்​தைக் கைவிடுவேன்​” எனத்​ தெரி​வித்​துள்​ளார்​.

குடியரசுத் தலைவர் மாளிகை நாடாளுமன்ற வாயில்கள் மூடல்

நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து சிஜேபி கட்சியினர் நேற்று நாடாளுமன்றத்தை முற்றுகையிட பேரணி சென்றபோது, நாட்டின் முக்கிய அடையாளப் பகுதிகளாக திகழும் நாடாளுமன்றம் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகையின் நுழைவு வாயில்கள் அதிரடியாக மூடப்பட்டு பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டன.

சிஜேபி நிறுவனர் கைது? - பேரணியைக் கட்டுப்படுத்தவும், போராட்டம் மேலும் தீவிரமடைவதைத் தடுக்கவும் சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே (30) கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியது. இருப்பினும். இதனை டெல்லி காவல் துறை மறுத்துள்ளது.

எதிர்க்கட்சிகள் கண்டனம்: போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதற்கு சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சமாஜ்வாதி கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் இச்சம்பவத்தைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

அகிலேஷ் யாதவ் கூறுகையில், ‘‘நியாயமான கோரிக்கைகளுக் காகவும், மாணவர்களின் எதிர்காலத்திற்காகவும் அமைதியான முறையில் போராடிய இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் தடியடி நடத்தியிருப்பது ஜனநாயகத்தின் குரலை நசுக்கும் செயல். அரசு அடக்குமுறையைக் கைவிட்டு மாணவர்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்க வேண்டும்’’ என்றார்.

SCROLL FOR NEXT